ஜெயிலுக்கு செல்லும் இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் : கதறி அழுத லாஸ்லியா!!

பிக்பாஸ் வீட்டில் தற்போது அடைந்துவந்த கொலைகாரன்-பேய் டாஸ்க் இன்று முடிவுக்கு வந்தது. அப்போது வனிதா கொலைகாரி என அனைத்து போட்டியாளர்களுக்கு காட்டப்பட்டது.

அதன்பிறகு சிறப்பாக டாஸ்க் செய்த மூன்று பேரை தேர்ந்தெடுக்க சொல்லப்பட்டது. அப்போது மோகன், வனிதா, சாக்ஷி ஆகியோரின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் மூவரும் அடுத்த வார தலைவர் போட்டியில் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

மேலும் சரியாக டாஸ்க் செய்யாத இருவரை தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் என கூறப்பட்டது. அப்போது சேரன் மற்றும் சரவணன் ஆகியோரின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதனால் கோபமான சரவணன் மற்ற போட்டியாளர்கள் கோபமாக திட்டினார். அப்போது லாஸ்லியா நான் ஜெயிலுக்கு போகிறேன் என கூறினார். அதன்பிறகு அவரை வனிதா திட்டியதால் டென்ஸனான ஆவர் பாத்ரூம் சென்று கதறி அழுதார். கவின் அவரை சென்று சமாதானப்படுத்த முயன்றார்.

இதுபற்றிய வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது, நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்துவிட்டது. ஜெயிலுக்கு யார் போகப்போவது என நாளை தான் தெறியவரும்.

பிக் பாஸ் வீட்டில் நடப்பது காதல் அல்ல, அதுக்கு பெயர் வேற : கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்!!

பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது எதுவும் காதல் அல்ல, எல்லாம் செக்ஸ் தான் என பிக் பாஸ் போட்டியாளரே கூறியிருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேறியவர் மமதி சாரி.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் குறித்த கேள்விகளுக்கு ஓபனாக பதிலளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கமல்ஹாசன் நாம் பேசும் தமிழை தான் ஏளனம் செய்வார், ஆனால் அவரே வார்த்தைகளை தேடி தேடி தானே பேசுகிறார். அவர் செய்தால் தவறில்லை நாம் செய்தால் தவறு என விமர்சித்துள்ளார்..

மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் காதல்கள் குறித்து கேட்டதற்கு அங்கு நடப்பது காதல் அல்ல.. செக்ஸ் எனவும் விமர்சித்துள்ளார். மமதி சாரி இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வாய்ப்புக்காக நடந்த செ க்ஸ் டீல்!!

எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒவ்வொரு நாளும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசாத மக்கள் இல்லை, அந்நிகழ்ச்சி பற்றி எழுதாத டிஜிட்டல் ஊடகங்கள் இல்லை. டிவி பார்க்காத பழக்கம் இல்லாதவர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக இரவு டிவி முன்பு ஆஜராகிவிடுகிறார்கள்.

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பாலிவுட்டில் சக்கைபோடு போட, தற்போது தென்னிந்தியாவிலும் பேவரைட் டிவி நிகழ்ச்சியாக உருவெடுத்திருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகளே பல பரப ரப்புகளை ஏற்படுத்த, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றாலும், அந்த நிகழ்ச்சி குறித்து சிலர் கூறும் புகார்களும், முன் வைக்கும் குற்றச்சாட்டுகளும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் செய்வதை விட சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், பிரபல விஜே ஒருவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வேண்டும் என்றால் செ க்ஸ் டீல் செய்துகொள்ள வேண்டும், என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கேட்டதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு தொலைக்காட்சி துறையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருப்பவர் ஸ்வேதா ரெட்டி. இவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்வேதா ரெட்டி கூறுகையில், “பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளர்களில் ஒருவராக என்னை தேர்வு செய்திருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினார்கள். நானும் சம்மதம் தெரிவித்தேன். பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் எனக்கு போன் செய்து, “உங்களை ஒரு போட்டியாளராக தேர்வு செய்வதால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என்பது எனக்கு புரிந்துவிட்டது. இதையடுத்து நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று பாகங்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், தெலுங்கில் முதல் பாகத்தை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க, இரண்டாம் பகுதியை நடிகர் நானி தொகுத்து வழங்கினார்.

வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் தெலுக்கு பிக் பாஸ் சீசன் 3 யை, நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

40 வயதில் நிர்வாண போஷ் கொடுத்த விஜய் பட நடிகை : ரசிகர்கள் அதிர்ச்சி!!

முதுமையிலும் இளமையாக தெரிபவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தான். அதிலும், நடிகைகளில் சிலர் தங்களது உடலின் மீது பெரும் அக்கறைக் கொண்டு, பட வாய்ப்புகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதேபோல், அவர்கள் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

2000 ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா பியார் ஹய்’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜயின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார்.

தற்போது 40 வயதாகும் அமிஷா பட்டேலுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும், அவர் புது புது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அமிஷா படேல், சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்றில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக போஷ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த நிர்வாண புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

லொஸ்லியாவிடம் அனைவரது முன்னிலையில் காதலை சொன்ன கவின் : சாக்‌ஷியின் ரியாக்‌ஷன் இதோ!!

பிக்பாஸ் வீட்டில் இன்று காலை பேட்ட பராக் பாடலுடன் ஆரம்பித்தது. அதன் பின் மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் கவினும் சாண்டியும் தங்களது ஸ்டைலில் பாட்டு பாட ஆரம்பித்தனர்.

அப்போது லொஸ்லியாவை பார்த்து கவின், காதலை கூறினால் ஏற்று கொள்ள மாட்ரியே லொஸ்லியா என சாண்டியுடன் இணைந்து பாட அதை கண்ட சாக்‌ஷியின் வயிறு எரிவது இங்கு வரை வாடை அடித்தது.

அப்போது முகம் சுருங்கிய சாக்‌ஷியின் புகைப்படங்கள் இதோ…

உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன், என்ன இப்படி ஆகிட்டாங்க, இதை பாருங்க!!

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து புலி, வேதாளம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தோன்றினார்.

அதை விட தெலுங்கில் இவர் கொடிக்கட்டி பறந்த காலம் எல்லாம் உள்ளது, இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக நடிக்காமலேயே இருந்தார்.

தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகின்றார், இவர் சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு பேஷன் ஷோ ஒன்றில் இவரின் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், நீங்களே அதை பாருங்கள்…

முடிவுக்கு வந்தது சஞ்சீவ்-ஆல்யா மானசா வாழ்க்கை : ரசிகர்கள் அதிர்ச்சி!!

ராஜா ராணி என்ற சீரியல் மக்களிடம் படு பிரபலம். அதில் ரீல் ஜோடியாக நடித்து வந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் நிஜ ஜோடிகளாக மாறியது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான்.

ஒன்றாக இணைந்த பிறகு சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி அதிகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறதாம். இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால் அதே சமயம் இந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க அதே ஜோடி நடிக்க இருக்கிறார்கள் என்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இனிமேல் இந்த ஜோடியை பார்க்க முடியாதா என்ற ஏக்கம் மட்டும் ரசிகர்களிடம் உள்ளது.

அமலா பால், விஜே ரம்யா உதட்டோடு உதடு முத்தம், புகைப்படத்தை பார்த்த ஷாக் ஆன ரசிகர்கள்!!

அமலா பால் ஆடை படத்தின் ரிலிஸிற்காக காத்திருக்கின்றார். இப்படத்தில் விஜே ரம்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர், ட்ரைலர் வெளிவந்து செம்ம சென்சேஷன் ஆனது, இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் வேகவேகமாக சில ஷாட்ஸ் வரும்.

அதில் ஒரு காட்சியில் அமலா பால், ரம்யா உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி உள்ளது, இதை ரசிகர்கள் எப்படியோ கண்டுப்பிடித்து ஷேர் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் பல ரசிகர்களுக்கும் செம்ம ஷாக் கொடுத்துள்ளது, இதோ..

அனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி!!

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார்.

அதிலும் டுவிட்டரில் இவர் வெளியிடும் போட்டோ ஷுட் புகைப்படங்கள் தான் அதிகம். கடந்த சில நாட்களாக இவரும் கிரிக்கெட் வீரர் பும்ராவும் காதலிக்கிறார்கள் என கிசுகிசு எழ நடிகையும் மறுத்தார்.

பும்ரா டுவிட்டரில் 25 பேரை பாலோ செய்கிறார், அதில் நடிகை என்றால் அனுபமா தான். காதல் கிசு கிசு வர பும்ரா, அனுபமாவை டுவிட்டரில் அன் பாலோ செய்துள்ளார். இதனால் இவர்களது காதல் கிசு கிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை : நடிகை ஓவியா வருத்தம்!!

2019 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஓவியா, சமீபத்தில் ‘களவாணி 2’விலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு குறைந்து வாய்ப்புகள் குறைந்த நிலையில், பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான ஓவியா, கையில் தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் இருக்கின்றன.

அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘களவாணி 2’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதால் அம்மணி குஷியாக இருக்கிறாராம்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா? என்று ஓவியாவிடம் கேட்டதற்கு, “சினிமா என்ன அரசியலில் ஈடுபடுவதற்கான பயிற்சி மையமா?” என்று கேள்வி எழுப்பியவர், “சினிமாவில் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால், அதை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்துவிடும் நிலைமை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது.” என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பேசியவர், “தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை, எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அப்போது வருவேன். அப்போதும் தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். நான் தமிழ்நாட்டை விட்டு செல்ல மாட்டேன்.

எதாவது நல்லது செய்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்காக தான் செய்வேன். இங்கு தான் எனக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அதே சமயம், ஓவியா ஆர்மியை தவறாக பயன்படுத்த மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.