பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் பெரும் சர்ச்சையில் சிக்கிய பாத்திமா பாபு!!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 15 நாட்களை கடந்துவிட்டது. சாக்‌ஷி செய்யும் வேலையால் வீட்டில் குழப்பம் வர வனிதா அதை பெரிதாக்கி பிரச்சனை செய்து விடுகிறார். தற்போது அபிராமி, மதுமிதா இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு சமாதானம் அடைந்தனர். மேலும் முதல் வார வெளியேற்றத்தில் பாத்திமா பாபு வெளியேறினார்.

சக போட்டியாளர்கள் பற்றி பிக்பாஸ் மேடையில் கூறியதை சரியாக புரிதலோடு கணித்துள்ளீர்கள் என பாராட்டினார். வெளியே வந்த பின் பாத்திமா பாபு பல விமர்சனங்களை எடுத்துரைத்தார். இதில் அவர் சேரன் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவும் அவரும் அப்பா மகள் போல இருக்கிறார்கள். ஆனாலும் சேரன் சார் லாஸ்லியாவை நெருக்கமாக தொட்டு பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. அப்பா மகள் ஆனாலும் சற்று இடைவெளி இருக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் பல ரசிகர்கள் பாத்திமா பாபு மீது அதிருப்தியில் இருப்பதோடு சேரன் பற்றி நீங்கள் சொன்னது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளனர்.

லொஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதா, இணையத்தில் உலாவரும் புகைப்படம்!!

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் வந்ததில் இருந்து மிகப்பெரும் ரசிகர்களை பெற்றுவிட்டார். இவருக்கு என்று ஆர்மி எல்லாம் ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில் லொஸ்லியா பற்றி பல தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது தான், அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தில் லொஸ்லியா திருமண கோலத்தில் நிற்பது போல் உள்ளது.

இதுக்குறித்து அவருடைய தோழி ஒருவர் கூறுகையில் ‘அதை பார்க்கும் போதே தெரிகின்றது நன்றாக எடிட் செய்த புகைப்படம் என்று.

லொஸ்லியாவை வேண்டுமென்றே காயப்படுத்த ஒரு சிலர் செய்யும் வேலை தான் இது’ என கோபமாக பேசியுள்ளார். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் காரணம் இந்த புகைப்படம் தான்..

லொஸ்லியாவை அப்படி தொடாதீங்க சார், கொந்தளித்த பாத்திமாபாபு!!

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் எல்லோரின் பேவரட். இவருக்கு பிக்பாஸ் வீட்டின் வெளியேயும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அந்த வகையில் லொஸ்லியா தற்போது அடுத்த ஓவியாவாக வளர்ந்து வருவது தெரிகின்றது, இந்நிலையில் சேரன், லொஸ்லியாவை தன் மகள் போல் நினைத்து பழகி வருகின்றார்.

இதுக்குறித்து பாத்திமாபாபு கூறுகையில் ‘நீங்கள் மிகவும் நல்லவர் சேரன், எனக்கு அது தெரியும், ஆனால், மகள் போல் என்றாலும், லொஸ்லியாவை நீங்கள் தொடாதீர்கள். அவருடைய கன்னத்தை நீங்கள் தேய்ப்பது எனக்கு பிடிக்கவில்லை’ என கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி கொ லை செய்யப்பட்டார் : போலீஸ் அதிகாரின் அதிர்ச்சித் தகவல்!!

கடந்த ஆண்டு உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் அறையில் உயிரி ழந்தார். அவரது மறைவு இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அவரது மரணத்திற்கு பல காரணங்களும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மர ணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட படு கொ லை, என்று கேரள டிஜிபி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரள போலிஸின் மருத்துவ ஆலோசகராகவும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் உயிரி ழந்துள்ளார். இவர் இறப்பதற்கு முன்பாக கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங்கிடம், ஸ்ரீதேவி மர ணம் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டிஜிபி ரிஷிராஜ் சிங், ”நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து சொன்ன தடயங்களை பார்க்கும் போது ப டுகொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.

அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால் தான் மரணிக்க முடியும் என்பது உமாடாதனின் கருத்து.” என்று தெரிவித்துள்ளார்.

கேரள டிஜிபி-யின் இந்த தகவலால் பாலிவுட் சினிமா மட்டு இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அபிராமி இப்படி ஒரு வேலையை செய்தாரா? வெளியே வந்த பாத்திமாபாபு சொன்ன அதிர்ச்சித் தகவல்!!

பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமேனஷனில் யாரும் எதிர்ப்பாராத விதமாக பாத்திமாபாபு வெளியேறினார். இது பலருக்கும் ஷாக் தான்.

ஆனால், அதைவிட அவர் வெளியே வந்து கூறிய தகவல்கள் தான் எல்லோருக்கும் டபுள் ஷாக், அவர் கூறுகையில் ‘அந்த வீட்டில் அபிராமியின் செயல்பாடுகள் நார்மல் ஆகவே இல்லை.
அவரை அவரே நகத்தை வைத்து காயப்படுத்திக்கொண்டார், நான் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என்று அழுதார்.

பிறகு நான் அவரை சமதானப்படுத்த, பிறகு சைக்கார்டிஸ்ட் ஒருவர் வந்து பேச, நான் சரியாகிவிட்டேன் என்றார்’ என பாத்திமா கூறியுள்ளார்.

என்னுடன் 3 மணி நேரம் கேரவனில் நீ இருந்தாய் : ப்ரஸ் மீட்டில் பத்திரிகையாளரை தர்மசங்கடமாக்கிய கங்கனா!!

பாலிவுட் திரையுலகில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் கங்கனா. இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிகையாளரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

இதில் அவரை ஒரு கட்டத்தில் ‘நீ என்னுடன் கேரவனில் 3 மணி நேரம் இருந்தாய், எனக்கு மெசெஜ் அனுப்பினாய்’ என கூறி தர்மசங்கடமாக்கினார்.

பிறகு அந்த பத்திரிகையாளரும் ‘உங்களை பேட்டி எடுக்க தான் கேரவனுக்கு வந்தேன், அரை மணி நேரம் தான் உங்களுடன் இருந்தேன், உங்களுக்கு மெசெஜ் அனுப்பியிருந்தால், அந்த ஸ்கிரீன் ஷாட் வெளியிடுங்கள்’ என கூறினார்.

பிக்பாஸ் மீராவுக்கு பாலியல் கொடுமை? கதறி அழுத சோகம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன். சினிமாவில் சில படங்களில் அவர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்.

மாடலிங் துறையில் இருந்த அவர் பெண்களிடம் பண மோசடி செய்ததாக சமீபத்தில் சில சர்ச்சைகள் எழுந்தது. இதனை மனதில் வைத்து ஒரே துறையை சேர்ந்த சாக்‌ஷி, அபிராமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையை கிளப்பியதை அனைவரும் அறிவார்கள்.

எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட மீரா மிதுன் மீது இருக்கும் குறைகளை மற்றவர்கள் எடுத்து சொன்னார்கள். இந்நிலையில் நேற்று கடைசியில் சாக்‌ஷி மற்றும் முகெனிடம் நான் 6 வருடங்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன்.

நான் தமிழில் பெண் என்பதாலும் நிறம் குறைவாக இருப்பதாலும் மட்டப்படுத்தப்பட்டேன். முதலில் என்னை பலர் டிரைப் பண்ணாங்க என கூறியது தான் பாலியல் தொந்தரவை சந்தித்ததாக பற்றி வெளிப்படையாக பேசியுள்ளதாக தெரிகிறது.

விளம்பரத்திற்காக வனிதா போட்ட திருமண நாடகம் : ராபர்ட் வெளியிட்ட ரகசியம்!!

பிக் பாஸ் சீசன் 3 யில் பரபரப்பு ஏற்படுத்தும் போட்டியாளராக வலம் வரும் வனிதா, போட்டியில் மட்டும் இன்றி தனது நிஜ வாழ்விலும் பலவித சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார். இதனால், பிக் பாஸ் போட்டியும் விறுவிறுப்பாக நகர்கிறது.

குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸார் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பிறகு விசாரணையோடு வனிதாவை விட்டுவிட்டு வந்தனர். அதன் பிறகு அவரது மகள் கொடுத்த வாக்கு மூலத்தின் மூலம் வனிதா கைதில் இருந்து தப்பித்தார்.

இந்த நிலையில், பிரபல நடன இயக்குநர் ராபர்ட் வனிதா குறித்து வெளியிட்டிருக்கும் ரகசியத்தால் மீண்டும் சர்ச்சையில் வனிதா சிக்கியுள்ளார்.

நடன இயக்குநர் ராபர்ட்டை காதலிப்பதாக அறிவித்த வனிதா, அவரை திருமணம் செய்துக் கொண்டதாக கூறியதோடு, பொது நிகழ்ச்சிகளில் ராபர்ட் உடன் வலம் வந்தார். மேலும், ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்ற படத்தில் ராபர்ட் ஹீரோவாக நடிக்க, அப்படத்தை வனிதாவே தயாரித்தார்.

படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்ட வனிதா, ராபர்ட்டை தான் திருமணம் செய்துக் கொண்டதாக அனைவர் முன்பும் அறிவித்தார். ஆனால் உண்மையில் அவருக்கும் ராபர்ட்டுக்கும் திருமணம் நடைபெறவில்லையாம். படத்தின் விளம்பரத்திற்காகவே அவர் அப்படி ஒரு பொய்யை சொன்னதாக, ராபர்ட் தற்போது கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறிய ராபர்ட், வனிதா அவருக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறியவுடன். நான் ஏன் அப்படி சொன்னார் என்று அவரிடம் கேட்டேன், அவரோ “ராபர்ட் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, நம்ம படத்தின் புரோமோஷனுக்காக தான்” என்று என்று கூறி தன்னை சமாதானப்படுத்தியதாக, தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த மோசமான செயல் : பொதுமக்கள் எதிர்ப்பு!!

மக்களிடன் பேவரைட் நிகழ்ச்சியாக விளங்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சியில் இடம்பெறும் சில மோசமான செயலால், தற்போது நிகழ்ச்சிக்கு மக்களின் எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

மதுமிதா, வனிதா என இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்து சண்டைப்போட்டு வருகின்றனர். போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்தும் என்பதால், அந்த சண்டையை தான் பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவும் அதிகமாக போக்கஸ் செய்கிறது.

அந்த வகையில், நிகழ்ச்சியில் ஷெரின் மிக மோசமான வார்த்தைகளை பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நிகழ்ச்சியை பார்த்த மக்கள் அனைவரும், ஷெரின் என்ன இவ்வளவு மோசமாக பேசுகிறாரே, என்று அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவிக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“பலரும் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். அனைத்து வயதினரும் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து, சேனல் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்” என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் ஷெரின் பேசிய மோசமான வார்த்தைகளுக்காக அவர் கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள், ஷெரீனை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

வனிதா விவகாரத்தில் ஆதாரத்துடன் மாட்டிக் கொண்ட டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்!!

வனிதா, ராபர்ட் சில காலங்கள் காதலித்து வந்ததாக செய்திகள் வந்தது. இதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா சென்றுள்ளார்.

இந்நிலையில் ராபர்ட் வெளியே பல பேட்டிகளில் எனக்கும், வனிதாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவர் பப்ளிசிட்டிக்காக தான் என்னை காதலிப்பதாக கூற சொன்னார் என தெரிவித்தார்.

ஆனால், ராபர்ட் வனிதாவின் பெயரை டாட்டூ எல்லாம் குத்தியிருந்த புகைப்படம் தற்போது வெளியாகி அவர் சொன்னது பொய் போல் காட்டியுள்ளது, இதோ…