ஜோதிகாவால் சூர்யாவுக்கு வந்த புது சிக்கல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவதோடு, வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி, தனது அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு பெரும் உதவி செய்து வருகிறார்.

தற்போது நடிப்பதுடன், தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் சூர்யா தயாரித்து வருகிறார்.

சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் நேற்று வெளியான ‘ராட்சசி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதற்கிடையே, ஜோதிகாவின் பேச்சால் சூர்யா புது சிக்கலில் சிக்கியிருக்கிறார். அதாவது, ராட்சசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய ஜோதிகா, “ஒன்று இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாடுவது, அவர்களை காதலிப்பது போன்ற ரெகுலர் விஷயங்களை தான் முன்னணி ஹீரோக்கள் செய்து வருகிறார்கள்” என்று கூறியதோடு, ”சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் தான் இருக்கிறது, இது மாற வேண்டும். அதேபோல் சினிமாவில் பெண்களை இழிவாக பேசுவது, தறக்குறைவாக பேசுவதையும் கைவிட வேண்டும்.” என்று பேசினார்.

இந்த நிலையில், சூர்யாவின் ‘காப்பான்’ படத்தின் ஒரு பாடலின் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. “சிரிக்கி மக” என்று தொடங்கும் இந்த பாடலில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் வார்த்தைகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

”ஒருவனை காதலித்துவிட்டு, இன்னொருவருடனுன் குழந்தை பெற்றுக்கொண்டாள்” என்ற ரீதியில் பெண்களை கேவலப்படுத்தும் விதமாக இந்த பாடல் வரிகள் அமைந்திருக்கிறது.

இதனை சுட்டிக்காட்டியிருக்கும் நெட்டிசன்கள், ”ஊருக்கு உபதேசம் செய்யும் ஜோதிகா முதலில் அவரது கணவருக்கு உபதேசம் செய்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பிக்பாஸில் மீண்டும் காதலை சொன்ன கவின் : லாஸ்லியா கொடுத்த ரியாக்ஷன்!!

சரவணன் மீனாட்சி புகழ் நடிகர் கவின் தற்போது பிக்பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். வீட்டில் அவர் சிலரை காதலித்து வருவதாக கூறி வருகிறார்.

அபிராமியை காதலிப்பதாக கூறிவந்த அவர் தற்போது கடந்த சில நாட்களாக லாஸ்லியாவை இம்ப்ரெஸ் செய்ய சில விஷயங்களை செய்துவருகிறார்.

அவரை பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டு பாடிய கவின், இன்று அவர் நேரடியாகவே லாஸ்லியாவிடம் பேசினார். அப்போது சாக்ஷி அகர்வாலும் உடன் இருந்தார்.

அதற்கு பதில் அளித்த லாஸ்லயா, “ஆக்சுவலி நீ கதைக்கும் விதம் எனக்கு பிடிச்சிருக்கு. உன்னை கடுப்பேத்ததான் அண்ணா என கூப்பிட்டேன்” என தெரிவித்துள்ளார். அதை கேட்ட கவின் சந்தோசம் தான்.

திருமணம் பற்றி ஓவியா பேச்சால் அனைவரும் அதிர்ச்சி!!

நடிகை ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். அதில் அவர் நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் ஏத்துக்கொள்ளாததால் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார்.

அதன் பிறகும் அவர்கள் காதலில் இருப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில் நேற்று களவாணி 2 படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய ஓவியாவிடம் திருமணம் பற்றி செய்தியாளர்கள்கேட்டுள்ளனர் .

“நான் திருமணம் செய்யபோவதில்லை. ஆண் துணை தேவையில்லை. இப்படி இருப்பதே நன்றாக உள்ளது” என பதில் அளித்துள்ளார் ஓவியா.

பிக் பாஸ் லாஸ்லியா குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் மக்களின் பேவரைட் போட்டியாளராக லாஸ்லியா விளங்கி வருகிறார். இலங்கையை சேர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு, சமூக வலைதளங்களில் ஆர்மி பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா எப்படி ரசிகர்களுக்கு பிடித்தமானவராக இருந்தாரோ அதுபோல் லாஸ்லியா தான் தற்போதைய பிக் பாஸ் கனவு கண்ணியாக திகழ்கிறார்.

இந்த நிலையில், லாஸ்லியா குறித்து அவரது பள்ளி நண்பர் என்று கூறிக்கொண்டு ஒருவர் சமூக வலைதளத்தில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவலால், லாஸ்லியா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது, லாஸ்லியாவுக்கு திருமணமாகிவிட்டதோடு, விவாகரத்தும் ஆகிவிட்டதாம். ஆனால், அவர் தனக்கு திருமணமான விஷயத்தை சொல்லாமல் மறைத்து வருவதாகவும், அந்த நபர் தெரிவித்துள்ளார்.

ட்விடரில் வெளியாகியுள்ள லாஸ்லியா குறித்த இந்த பதிவு வைரலாகி வருவதோடு, ஏராளமானவரக்ளால் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் கவீனை கூப்பிட்டு லோஸ்லியா சொன்ன அந்த வார்த்தை : துள்ளிக் குதித்த கவீன்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாம் நாள் ரஜினியின் மரணமாஸ் பாடலுடன் ஆரம்பித்தது. அதற்கு முன் ஒன்பதாம் நாள் இரவு 10.55 மணிக்கு லோஸ்லியா கவீனை கூப்பிட்டு தனியாக பேசினார்.

அப்போது உடன் ஷாக்சி இருந்தார். இவர்கள் பேசிக் கொண்டிருந்த போது கவீன் உங்கள் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும், நீங்கள் இருவரும், நீங்களாக இருக்கிறீர்கள், அதனாலே எனக்கு உங்களை பிடிக்கும், தயவு செய்து என்னை அண்ணா என்று மட்டும் கூறாதே என்று லோஸ்லியாவிடம் கூறினார்.

அதன் பின் என்னிடம் என்ன சொல்ல வந்தாய் என்று லோஸ்லியா கேட்க, உடனே நீ பேசும் விதம் எனக்கு பிடித்திருக்கு அதை சொல்லவே நான் அழைத்தேன், அண்ணா என்று உன்னை கடுப்பேத்தவே சொன்னேன் என்று கூற, உடனே கவீன் இதை வைத்தே நான் ஒரு வாரம் ஓட்டுவேன் என்று துள்ளிக் குதித்தார்.

பிக்பாஸ் வீட்டில் ஷெரினாக மாறிய கவீன் : ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த நடிகையின் மோசமான செயல்?

பிக்பாஸ் தொடங்கி நேற்று 11 நாள் ஆகிவிட்டது பிக்பாஸ் வீட்டிலுள்ள ஆண்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படது. இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்களாக மாற வேண்டும்.

இந்த டாஸ்க்கில் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் நடிகை ஷெரின் போல் ஆடையை அணிந்து கொண்ட கவீன், அரைகுறை ஆடையுடன் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்.

இந்த டாஸ்க்கில் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் நடிகை ஷெரின் போல் ஆடையை அணிந்து கொண்ட கவீன், அரைகுறை ஆடையுடன் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார்.

இந்த செயலை பார்க்கவே மோசமாக இருக்கிறது. கவீனுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கிறது இவர் இப்படியொரு ஆடை அணியலாம என பிக்பாஸ் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் இன்று அழகு தேவதையாக இருந்த லோஸ்லியா : செம க்யூட் HD புகைப்படங்கள்!!

பிக்பாஸ் வீட்டில் நேற்று பத்தாம் நாள், போட்டியாளர்கள் தங்களுடைய வீட்டு வேலைகளுக்கிடையே பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று தமிழ் மக்களின் அதிக ரசிகர்களைப் பெற்ற லோஸ்லியா இன்று செம அழகாக இருந்தார். இதோ அவரின் புகைப்படங்கள்…

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீசாரிடம் வனிதா சொன்னது என்ன? மகள் முடிவுக்கு பின் ஆப்பா?

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு கொண்டு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா. இந்நிலையில் ஹைதராபாத்துக்கு வந்த வனிதா தனது மகள் ஜெனிதாவை கடத்தி வைத்துள்ளார் என அவரின் இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் தெலுங்கானா போலீசில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து அவரிடம் விசாரிக்க ஆந்திர பொலிசார் முன்னர் சென்னை வந்த போது வனிதா தலைமறைவானார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அவர் இருப்பதை அறிந்த தெலங்கானா போலீசார், தமிழகக் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.

நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலுங்கானா காவலர்கள், வனிதா விஜய்குமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்கத்துக்குள் சென்றார்கள்.

அங்கு அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது, அப்போது கடத்தப்பட்டதாக சொல்லப்படும் ஜெனிதா, எங்கு உள்ளார் என்பதை வனிதா போலீசாரிடம் சொல்ல மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மாலை 5 மணிக்கு வனிதா மகளை நேரில் அழைத்து போலீசார் விசாரிக்கவுள்ளனர், அப்போது மகள் தாயுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? அல்லது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? என்பதை பொறுத்தே வனிதாவின் கைது குறித்து முடிவு செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு என்னை வெளியேற்றுங்கள் : பைத்தியக்காரன் ஆகிவிடுவேன் என சித்தப்பு வேதனை!!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர் யார் என்றால் அது பருத்தி வீரன் சித்தப்பு சரவணன் தான், அவர் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்.

ஆனால் வீட்டில் இருக்கும் வனிதா, அபிராமி மற்று மதுமிதாவின் சண்டையால் செமையாய் குழம்பு போய் இருக்கும் சரவணன், என்னால் இதை எல்லாம் பார்க்க முடியவில்லை, இதற்கு மேலும் நான் இருந்தால் பையத்தியக்காரன் ஆகிவிடுவேன்,

என்னை வெளியேற்றிவிட்டு, வேறு யாராவது எடுத்துக் கோங்க என்று கெஞ்சியுள்ளார். இதனால் சரவணன் அதிக நாட்கள் பிக்பாஸ் வீட்டில் நீடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போலீஸ் : கைதாகும் வனிதா, மீரா மிதுன்!!

பிக் பாஸ் சீசன் 3 கடந்த மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியின் துவக்கத்திலேயே காதல், மோதல் என்று பரபரப்பாக ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்து பேசிய மதுமிதா மீது சக பெண் போட்டியாளர்கள் கடும் கோபமடைந்திருப்பதோடு அவரை தனிமை படுத்தியுள்ளனர்.

இதனால், மதுமிதாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர் தனியாக புலம்பி வருகிறார். இது நீடித்தால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார், என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், வனிதா மற்றும் மீரா மிதுன் ஆகியோரை போலீஸார் கைது செய்வதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் விரைவில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆள்கடத்தில் வழக்கில் வனிதா விஜயகுமாரை தெலுங்கானா போலீஸார் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால், தெலுங்கானா போலீஸ் குழு விரைவில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளார்களாம்.

அதேபோல், அழகிப் போட்டி நடத்துவதாக சில மோசடிகளை செய்ததாக மீரா மிதுன் மீது புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் யாருக்கும் தெரியாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டாராம்.

இதனால், மீரா மிதுனை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்ய முடிவு செய்துள்ளார்களாம். எனவே, விரைவில் அவர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள் தான் பெரும் சர்ச்சையை உருவாக்கும் என்றால், தற்போது போட்டியாளர்களை போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட உள்ள தகவால் பிக் பாஸ் போட்டியே தற்போது சர்ச்சையாகியுள்ளது.