என் நண்பர்கள் சொல்லி அனுப்பியது இதுதான் : கேமரா முன் புலம்பும் கெவின்!!

புலம்பும் கெவின்

விஜய் டீவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்த படியே விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நேற்று முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷன் நடந்தது இதில் கெவின் பெயர் வந்தது அனைவருமே ஷாக்காக தான் பார்த்தார்கள், கெவினுக்கு நல்ல பெயர் இருக்கு இவர் எப்படி என கேட்டுக்கொண்டார்கள்.

பின்பு எலிமினேஷன் முடிந்த பின் கெவின் மற்றும் சாக்‌ஷி இருவரும் சமையல் செய்யும் இடத்தில் கேமரா பார்த்தபடி போசிக்கொண்டனர். அப்போது கெவின் உலகத்திலே நான் தான் நல்லவனு நெனச்சு வாழ்ந்துட்டு இருந்தேன் எனக்கே இப்படியா எனக் கேட்ட சாக்‌ஷியும் நானுதான் எனக்கூற அதற்கு கெவின் என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறியது இது தான்.

பிக்பாஸ் வீட்டில் நாயம், தர்மம் நீ பேசத… நாயம் தான் பேச கூடாது, ஜாலியா இருந்திட்டு நாயமா இருக்கிற இடத்தில நாயமா இருக்கேனு சொல்லிட்டு வந்தேன் ஆனா இப்படி இருக்கே என கேமரா முன் புலம்பிக்கொண்டு இருக்கிறார் கெவின்.

எது எப்படியோ முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷனில் பலரது பெயரும் வந்தது அதில் மீராவுக்கும், மதுமிதாவுக்கும் தான் அதிக எதிர்ப்பு இருக்கு என்பது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் லொஸ்லியாவை வைத்து செய்யப்படும் மிகப் பெரிய தந்திரம்? நம்ப முடியாத பகீர் தகவல்!!

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் குறுகிய நாட்களிலேயே அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளார் லொஸ்லியா.

அவர் அழகாக இருக்கிறார் அதனால் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். ஆனால் பிக்பாஸ் தொடங்கிய அந்த நாளிலேயே லோஸ்லியாவுக்கு டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் ஆர்மி கிளம்பியது எப்படி சாத்தியமானது?

இதற்கு பின்னணியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனவே இருக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அதாவது லோஸ்லியா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். அவருக்கு இந்தியளவில் தானாக ரசிகர்கள் சேர்ந்தாலும், வெளிநாட்டில் ரசிகர்களை சேர வைத்து நிகழ்ச்சியை பிரபலப்படுத்த தொலைக்காட்சி நிறுவனவே பிக்பாஸ் ஆர்மியை சமூகவலைதளத்தில் தொடங்கி வைத்திருக்கலாம் என நெட்டிசன்கள் கணக்கு போடுகிறார்கள்.

நெட்டிசன்களின் கணக்கு உண்மையோ பொய்யோ லோஸ்லியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை

ஜூலியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய நபர் : மகிழ்ச்சியுடன் ஜூலி கொடுத்த போஸ்!!

ஜூலியை மறக்க முடியுமா என்றால் யாரும் இல்லை என சொல்வார்கள். ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார்.

சீசன் 3 வந்தும் இன்னும் அவரை பலர் சமூகவலைதளங்களில் தேவையில்லாமல் விமர்சித்து தான் வருகிறார்கள். அவரும் இதை வருத்தத்துடன் சமாளித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்தநாளாம். இதை அவரின் நண்பர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா? போட்டியாளராக இல்லை, எப்படி நுழையவுள்ளார் பாருங்கள்!!

பிக்பாஸின் முதல் சீசனின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் வீட்டில் ஆரவ்வுடன் காதல் என இவரது ட்ராக் மாறினாலும் மக்கள் இவர் மேல் வைத்திருந்த அன்பு குறையவில்லை.

பிறகு இரண்டாவது சீசனின் துவக்கத்தில் கெஸ்ட்டாக நுழைந்தவர் அதன் பின் சில படங்களிலும் நடித்துவிட்டார். இந்நிலையில் ஓவியா கதாநாயகியாக விமலுடன் நடித்துள்ள களவாணி-2 படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதால் இதற்கு ப்ரமோஷன் தேடி கொள்வதற்காக ஓவியா பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் ஒரு நாள் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஓவியா பிக்பாஸ் வீட்டில் வந்தால் அன்று டிஆர்பி எகிறும் என்பதால் பிக்பாஸும் இதற்கு அனுமதிப்பார் என்றே தெரிகிறது. கடந்த சீசனில் கூட கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்திற்காகவும் ஹரிஷ் கல்யான் பியார் ப்ரேமா காதல் படத்திற்காகவும் சென்றது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸின் 17வது போட்டியாளர் இந்த பிரபலம் தானா? பவர் ஸ்டார் கிடையாது, யாரென்று பாருங்க!!

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். ஆனால் மொத்தம் 17 போட்டியாளர்கள் என்று பிக்பாஸ் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். அந்த 17வது போட்டியாளர் யார் என்று ரசிகர்கள் குழம்பி போக சிலரோ அது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தான் என கூறி வந்தனர்.

ஆனால் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் 17வது போட்டியாளராக பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் பிக்பாஸ் வீட்டினுள் செல்லவுள்ளதாக மிகவும் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 17வது போட்டியாளர் யாராக இருந்தாலும் இன்று (ஞாயிறு) உள்ளே செல்வார் என்று தெரிகிறது.

 

கண்ணீர் விட்டு கதறி அழுத இலங்கைப் பெண் லொஸ்லியா : காரணம் இதுதான்!!

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் தெரிவித்துவருகின்றனர்.

இன்று இலங்கை பெண் லொஸ்லியா தன் கதையை பேசியுள்ளார். தன்னுடைய அக்கா குடும்ப சண்டையில் விபரீத முடிவு எடுத்ததுடன் தற்போது உயிருடன் இல்லாதது பற்றி கண்ணீருடன் பேசியுள்ளார்.

மேலும் தன்னுடைய அப்பா கனடாவில் இருபதாகவும், அவரை பார்த்தே 10 வருடம் ஆகிறது என அவர் கண்ணீருடன் பேசியுள்ளார்.

மீராவுடன் என்ன தான் பிரச்சனை? உண்மையை உடைத்த பிக்பாஸ் அபிராமியின் அம்மா!!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தனது மகள் அபிராமியை மீரா வம்புக்கிழுப்பது போல இருப்பதாக கூறியுள்ள அவர் தாய் அதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் புதிதாக இரு தினங்களுக்கு முன்னர் மீரா மிதுன் நுழைந்தார். இதன்பின்னர் அபிராமிக்கும் ,மீராவுக்கும் பிரச்சனை இருப்பது போல ப்ரோமோ காட்டப்பட்டது.

இது குறித்து பேசிய அபிராமியின் தாய், அபிராமியும், மீராவும் மாடலிங் என்ற ஒரே துறையை சேர்ந்தவர்கள். ஒருவரும் மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் ஒன்றாக சந்தித்துள்ளனர், இருவருக்கும் சிறிய நட்பு இருந்தது.

அதன்பின்னர் இருவருக்கும் ஏதோ பிரச்சனை இருந்திருக்கலாம், அது குறித்து நாம் ஆராயக்கூடாது. ஏனென்றால் இருவருக்கும் வெவ்வேறு குணம் இருக்கலாம். எனக்கு என் மகளை பற்றி தெரியும், ஆனால் மீராவை பற்றி அதிகம் தெரியாது.

கடைசியாக பார்த்த பிக்பாஸ் புரோமோவி, அபிராமியை மீரா வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பது போல உள்ளது. மீரா முதல் நாள் வரும் போதே அவரை பிடிக்காதது போல பலரும் முகபாவனையை காட்டினார்கள். அப்படியென்றால் மீராவிடம் எதோ பிரச்சனை இருப்பதாகவே கருதுகிறேன் என கூறியுள்ளார்.

மேனேஜருடன் படுத்ததால் தான் இப்படி இருக்கேன் என்றார்கள்.. இலங்கை மாடலை கஷ்டப்படுத்திய அந்த நிகழ்வு!!

பிக்பாஸ் வீட்டில் நேற்றிலிருந்து லக்சரி பட்ஜெட்டுக்காக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், நான்காவது நாளான இன்று இலங்கையைச் சேர்ந்த மாடலான தர்ஷன் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கஷ்டங்கள் குறித்து கூறிக் கொண்டிருந்தார். அப்போது, மனதை புன்படுத்திய நபர் குறித்து கூறுங்கள் என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருந்தார்.

அது குறித்து பேசிய தர்ஷன், நான் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்றதை பிடிக்காத பிரபல மாடலிங் மேனஜரான பிரைன் என்பவருடன் படுத்ததால் தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளான் என்று மிகவும் மோசமாக விமர்சித்ததாக கூறியுள்ளார்.

மேலும், பலர் என்னை விமர்சித்தனர். நான் இன்டர்நேஷனல் போட்டிக்கு செல்ல ஸ்பான்சர் இல்லாமல் போனதால் என் அம்மா தன்னுடைய நகையை விற்று தருகிறேன் நீ விமானத்திலாவது சென்று வந்துவிடு என கூறினார் என தர்ஷன் உருக்கமாக பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத மதுமிதா!!

பிக்பாஸ் வீட்டில் நேற்று அனைவரையும் கண்கலங்க வைத்தவர் ஜாங்கிரி மதுமிதா தான், அவர் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவின் காதல் கதை பற்றி கூறிய போது, என் அம்மாக்கு படிப்பு என்றால் அவ்வளவு பிடிக்கும், பார்க்க மிக அழகாக இருப்பார்.

அப்படி இருக்கையில் எங்க அப்பா வை ஒன் சைடாக காதலித்து, அம்மாவின் தாத்தா பாட்டியை ஐஸ் வைத்து திருமணம் செய்து கொண்டார். என் அப்பா குடி பழக்கத்திற்கு அடிமையானவர், இருப்பினும் அம்மா வாழ்ந்து வந்தாங்க, அப்புறம் அப்பா தொடர்ந்து குடித்து.. குடித்து.. சீக்கிரமே இறந்து போய்விட்டார்.

அப்பா இறந்த போது அம்மாவுக்கு வயது 30 கூட இருக்காது, அக்கா மூன்று பேர் மட்டும் தான், அண்ணன், தம்பி கிடையாது.
அப்பாவின் முகத்தை பார்த்தது கூட கிடையாது, ஒரு வயது இருக்கும் போதே இறந்துவிட்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் வரை என்னுடைய பிறந்தநாள் கூட தெரியாது, ஆனால் பள்ளி ஆண்டு விழாவின் போது குழந்தைகள் அவர்கள் அப்பா மற்றும் அம்மாவுடன் வருவார்கள்.

பிறந்தநாளுக்கு அப்பா அந்த கிப்ட் கொடுத்தார், இந்த கிப்ட் கொடுத்தார் என்று நண்பர்கள் கூறுவார்கள். இதனால் நான் என் அம்மாவிடம் நான் அப்பாவை பார்க்க வேண்டும் என்று கெஞ்சினேன், அப்பா ரெம்ப குடிப்பார் என்பதால், அவர் போட்டோவை கூட அவர் வைத்திருக்கவில்லை.

அதன் பின் தொடர்ந்து கெஞ்சிய போது அவர் அப்பாவின் பழைய வரைந்த புகைப்படத்தை காட்டினார், அதன் ஒரு பகுதி வழியாக சென்ற போது அது தான் அப்பாவின் கல்லறை என்று கூறினார். நான் என் அப்பாவை பார்க்க வேண்டும், அவர் இருந்தால் நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டேன் என்று கண்கலங்க, போட்டியாளர்கள் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.

இறந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய கடவுள் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!

பிரபல திரைப்பட நடிகையான விஜய நிர்மலா தமிழகத்தில் கடந்த 1946-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி பிறந்தார். அதன் பின் தன்னுடைய 7 வயதில் திரைத்துரையில் அடியெடுத்துவைத்த விஜய் நிர்மலா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 44 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒரு பெண் இயக்குநர் அதிகபட்சமாக 44 திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நிலை மோசமானததால், சிகிச்சைக்காக ஹைதராபாத் நகரில் கச்சிபோலி பகுதியில் உள்ள கான்டினென்டல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி இன்று தன்னுடைய 73 வயதில் இறந்தார்.

விஜய நிர்மலா தீவிரமான சாய்பாபா பக்தையாம். இதனால் அவர் கோவிலுக்கு வரும் தனக்கு தெரிந்த பக்தர்களிடம், நான் இறப்பது முக்கியமல்ல. தான் இறந்தால் வியாழக்கிழமை தான் இறக்க வேண்டும் என கூறி வந்துள்ளார். அதன்படியே மரணத்தில் அவரின் ஆசையை ஆண்டவன் நிறைவேற்றிவிற்றார் என்று பக்தர்கள் உருக்கமாக கூறியுள்ளனர்.