வெளிநாட்டவருடன் ஜோடியாக சுற்றும் பிரபல இளம் நடிகை : நெருக்கமான போட்டோவையும் வெளியிட்டார்!!

கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வரும் கோமாளி படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து சம்யுக்தா ஹெக்டேவும் நடிக்கிறார். மேலும் சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான்.

இவர் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஐரோப்பாவுக்கு சென்ற இடத்தில் அவர் வெளிநாட்டவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சாக்லேட்டும், வெனிலாவும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகையாகும் விஜய் சேதுபதியின் மகள் : இந்த படத்தில் தானாம்!!

தமிழ் பட ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி. இவ்வருடத்தின் தொடக்கத்தில் ரஜினியுடன் அவரின் நடித்த பேட்ட படம் வெளியானது.

அண்மையில் சூப்பர் டீலக்ஸ் படமும் வந்த கலவையான விமர்சனங்களை அள்ளியது. தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது பண்ணையாரும் பத்மினியும் புகழ் இயக்குனர் அருண் குமார் எடுக்கும் சிந்து பாத் படத்தில் நடித்துள்ளார். ஜூன் 21 ல் வெளியாகவுள்ள இப்படத்தில் அவரின் மகனும் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்திலும் இந்த சிறுவன் நடித்திருந்தான். இதனை அடுத்து விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறாராம்.

பிக்பாஸ் சாண்டியை ஏன் பிரிந்தேன்? பிரேக் அப் குறித்து காஜல் உருக்கம்!!

தமிழ் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் 15 போட்டியாளர்களில் ஒருவராக சென்றுள்ளார். இவருக்கு தற்போது திருமணமாகி குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் இவரின் முன்னாள் காதலியும் நடிகையுமான காஜல் பசுபதி, சாண்டி பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்வதை கண்டவுடன் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு ஸ்மைலி சிம்பிள் போட்டிருந்தார்.

இதைக் கண்ட இணையவாசிகள் முதல் காதலோ என்று கேட்க, அதற்கு அவர் நான் அட்ட கத்தி தினேஷ் மாதிரி, எனக்கு முதல் காதல் இல்லை, கடைசி காதல் என்று குறிப்பிட்டார்.

அப்புறம் ஏன் பிரேக் அப் என்ற போது, லவ் டார்ச்சர் ஓவரா செய்துட்டேன், வல்லவன் ரீமா சென் மாதிர் டார்ச்சர் கொடுத்தா எந்த பையன் தான் தாங்குவான் என்று கூற, இதைக் கண்ட இணையவாசிகள் பரவாயில்லப்பா என் மேல் தான் தப்பு ஒத்துக்கிட்டதே பெரிய மனசு என்று பாராட்டி வருகின்றனர்.

விஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்!!

விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிந்துபாத்’. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கும் இப்படம், ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,

படத்தின் தயாரிப்பாளர், ‘பாகுபலி’ பட தயாரிப்பாளருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட வேண்டிய தொகையை கொடுக்காததால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஜூன் 21 ஆம் தேதி படம் வெளியாகமல் போனது.

பிறகு இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து ‘சிந்துபாத்’ படத்தை வரும் ஜூன் 28 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு, தேதியை அறிவித்துள்ளது.

தற்போது ‘சிந்துபாத்’ 28 ஆம் தேதி வெளியாவதால், அன்றைய தினம் வெளியாக இருந்த யோகி பாபுவின் ‘தர்மபிரபு’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ மற்றும் ‘ஜீவி’ ஆகிய படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், படத்தின் ரிலீஸ் தேதியை 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டும், என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், “பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்.” என்று தெரிவித்துள்ளார்

பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த நடிகை : என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளராக கமலால் அறிமுகப்படுத்தப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த வகையில் ஆறாவதாக வீட்டிற்குள் சென்றவர் விளம்பர மாடல் அபிராமி. அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே பசிக்குது பசிக்குது என பறந்தார் அபிராமி.

உள்ளே நுழைந்த உடனேயே தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். பின்னர் மினி சைஸ் லாரி போன்று அமைக்கப்பட்டிருந்த கிச்சனில் பூட்டப்பட்ட ஃபுரூட்டி ரேக்கை திறக்க முயற்சித்து சேதப்படுத்தினார்.

அதோடு மட்டுமின்றி கேமராவை பார்த்தும் சாப்பாடு வேண்டும் என கேட்டு சைகை செய்தார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சைலன்ட்டாக இருக்க நுழைந்தவுடனேயே பசிக்குது பசிக்குது என தான் தன்வீட்டில் இருப்பதுபோல் காட்டிக்கொண்டார் அபிராமி.

இது மற்ற போட்டியாளர்களை எரிச்சல் படுத்துவது போல் இருந்தது. அதோடு நிகழ்ச்சியை பார்த்த நேயர்களும் அபிராமியின் நடவடிக்கையால் கடுப்பாகினர்.

அவருக்கு சூடு போடும் வகையில் கமல்ஹாசன் தனது கேமராமேனான ரோபோ சக்ரவர்த்திரை நாசுக்காக சாடினார். எனக்கும் தான் பசிக்குது நான் இப்படியா கூப்பாடு போடுகிறேன்? இதுலேயே தெரிகிறது நீ சின்னப்பையன் என கூறி நிகழ்ச்சிக்கு பிரேக் விட்டார்.

புதிய வீடு வாங்கிய தமன்னா : விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்!!

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் மும்பையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா அங்கு தான் பிறந்து வளர்ந்தார்.

தற்போது தமன்னா மும்பையில் ஒரு புதிய வீடு வாங்கியுள்ளாராம். அதற்காக அவர் செலவிட்ட தொகை பற்றி அறிந்தால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும். கடற்கரைக்கு மிக அருகில் இருக்கும் இடம் என்பதால் அவர் இரண்டு மடங்கு பணம் கொடுத்து வாங்கியுள்ளார்

Versova-Juhu லிங்க் ரோட்டில் Bayview என்ற அபார்ட்மெண்டில் 14வது தளத்தில் தான் தமன்னா வீடு வாங்கியுள்ளார். ஒரு சதுர அடிக்கு 80,778 ருபாய் அவர் கொடுத்துள்ளார். மொத்தம் 16.6 கோடி ருபாய் தமன்னா பில்டருக்கு கொடுத்துள்ளார். அதோடு ஒரு கோடி ருபாய் வரி மற்றும் பதிவு செய்வதற்கு செலவாகியுள்ளது.

லிப் கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன் : நடிகை ஐஸ்வர்யா!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில விஷயங்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளனார்.

இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ளார் அவர். “லிப்கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நான் ரொம்ப ரொமான்டிக் பெர்சன்.

நீங்கள் எது கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்” என கூறியுள்ளார். மேலும் நடிகர் சிம்பு மீது தனக்கு க்ரஷ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

தமிழ் பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் முழு பட்டியல் : முழுவிபரம் உள்ளே!!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நேற்று ஆரம்பமாகியுள்ளது. நேற்று இரவு 8 மணி முதல் முதல் நாள் காட்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

நேற்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் உள்நுழைந்தனர். போட்டியாளர்கள் விவரம் பற்றி லைவ் அப்டேட்ஸ் இதோ..

1. பாத்திமா பாபு (செய்தி வாசிப்பாளர்) : பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு களமிறங்கி உள்ளார். செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரைகளில் இவர் நடித்து பிரபலமானவர்.

2. லோஸ்லியா (செய்தி வாசிப்பாளர்) : 2-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் லொஸ்லியா சென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து உள்ளார்.

3. சாக்‌ஷி அகர்வால் : 3-வது போட்டியாளராக காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால் இடம் பெற்றுள்ளார். விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்துள்ளார்.

4. ஜாங்கிரி மதுமிதா (காமெடி நடிகை) : பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக நடிகை மதுமிதா பங்கேற்றுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா. அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

5. கவின் (நடிகர்) : பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் ஆண் போட்டியாளராக கவின் பங்கேற்றுள்ளார். திருச்சியை சேர்ந்த இவர் சின்னத்திரை நடிகராக பிரபலமானவர். கனா கானும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

6. அபிராமி (நேர்கொண்ட பார்வை பட நடிகை) : பிக் பாஸ் 3வது சீசனில் 6வது போட்டியாளராக அபிராமி களமிறங்கி உள்ளார். பிரபல மாடலான இவர் பல விளம்பரங்களில் நடித்து உள்ளார். அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

7.சரவணன் (பருத்தி வீரன் சித்தப்பு) : 7வது போட்டியாளராக நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். தமிழ் சினிமாவில் 20 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பருத்தி வீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

8. வனிதா விஜயகுமார் (நடிகர் விஜயகுமாரின் மகள்) : 8வது போட்டியாளராக நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் இவர். தமிழில் சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

9.சேரன் (இயக்குனர்) : 9வது போட்டியாளராக இயக்கனரும், நடிகருமான சேரன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் இறுதியாக திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

10.ஷெரின் (துள்ளுவதோ இளமை, விசில் பட ஹீரோயின்) : 10வது போட்டியாளராக நடிகை ஷெரின் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.

11.மோகன் வைத்தியா (பாடகர், வீணையாளர், நடிகர்) : 11வது போட்டியாளராக மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற ஆனந்த் வைத்தியநாதன் போல் இந்த முறை பாடகரும், நடிகருமான மோகன் வைத்யா பங்கேற்க உள்ளார்.

12. சாண்டி (டான்ஸ் மாஸ்டர்) : பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகைதந்துள்ள போட்டியாளர் நடன இயக்குநர் சாண்டி.

13.தர்ஷன் (மாடலிங், மிஸ்டர் ஸ்ரீலங்கன் டைட்டில் வின்னர்) பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகை தந்துள்ள போட்டியாளர் தர்ஷன். இவர் இலங்கைத் தமிழர்; மாடலிங் துறையில் உள்ளார்.

14.முகேன் ராவ் (பாடகர்) : பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளர் மலேசிய தமிழரும், பாடகருமான முகென் ராவ் வருகை தந்துள்ளார்.

15.ரேஷ்மா (விமான பணிப்பெண், தொகுப்பாளனி, நடிகை) : பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பதினைந்தாவது போட்டியாளர் ரேஷ்மா. வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.

நடிகை வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்த விஷால் : பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

நடிகர் விஷால் பெண் ஒருவரின் வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்து சென்றார் என அவதூறு பரப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் வெளியான மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் நடித்தவர் காயத்ரி சாய். சென்னையில் குடியிருக்கும் இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் ’கொங்கு நாட்டு இளவரசி’ என்ற பெயரில் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் விஷ்வதர்ஷினி என்ற பெண் காயத்ரியுடன் நட்பானார். பின்னர் ஒரு நாள் காயத்ரி வீட்டுக்கு சென்ற விஷ்வதர்ஷினி அவரிடம் அவசரமாக ரூ 20,000 கடன் கேட்ட நிலையில் காயத்ரியும் கொடுத்தார்.

இதன்பின்னர் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் விஷ்வதர்ஷினி தனது பேஸ்புக்கில் காயத்ரி மற்றும் அவர் மகள் குறித்து அவதூறு பரப்பினார். மேலும் நடிகர் விஷால், காயத்ரி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து இரவில் சென்றதாகவும் பதிவிட்டு அதிரவைத்தார்.

இது தொடர்பாக காயத்ரி கடந்தாண்டு நவம்பர் மாதம் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் விஷ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் சில மாதங்கள் கழித்து நேற்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காயத்ரி கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எனக்கு நீதி கிடைத்துள்ளது. விரைவில் விஷ்வதர்ஷினிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். விஷ்வதர்ஷினியைக் கைது செய்த சென்னை போலீஸ் ஆணையருக்கு நன்றி. விஷால் எனக்கு சிறு வயது முதலே நன்றாகத் தெரியும். என் வீட்டுக்கு வருவார், அவர் ஏன் சுவர் ஏறி குதித்து வரவேண்டும் என கூறியுள்ளார்.

என் மகளை நடிகை வனிதா விஜயகுமார் கடத்தி சென்றுவிட்டார் : கதறும் கணவன்!!

மகளை பராமரிப்பது தொடர்பான வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில் அது தொடர்பில் பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தொடர்ந்து எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.

ஆனந்தராஜ் மகளை தன்னுடன் ஐதராபாத்திற்கு அழைத்து சென்று வளர்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு வனிதா விஜயகுமார் ஐதராபாத் சென்று தன்னுடைய மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்.

இதை அறிந்த ஆனந்தராஜ் தன்னுடைய மகளை வனிதா விஜயகுமார் கடத்தி சென்று விட்டதாக ஐதராபாத் பொலிசில் புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து வனிதா திருவள்ளூர் நீதிமன்றத்தில் தன்னுடைய மகளுக்கு தான்தான் பாதுகாப்பு அளிப்பதாக கூறி தன் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக நடிகை வனிதா திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

விசாரணைக்காக அவரது கணவர் வராததால் தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.பின்னர் வெளியே வந்த வனிதா நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய மகளை நானே என் முழு பராமரிப்பில் வைத்து கொள்ளவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டேன், நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.