அங்காடித்தெரு நடிகர் மகேஷின் தற்போதைய நிலைமை இதுதான் : வருத்தத்துடன் அவரே கூறிய தகவல்!!

வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற அங்காடித்தெரு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் மகேஷ். திண்டுக்கல்லை சேர்ந்த இவருக்கு இந்த பட வாய்ப்பு திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்லில் பஸ்ஸுக்காக காத்திருந்த போது எதிர்பாராத விதமாக கிடைத்துள்ளது.

இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றாலும் இதன் பின் இவரது நடிப்பில் வெளிவந்த சில படங்களில் சுவடு தெரியாமல் அழிந்து போனது. தனது தற்போதைய நிலைமையை பற்றி மகேஷ் கூறுகையில் அங்காடித் தெரு படத்தில் நடித்த போது எனக்கு சினிமா என்றால் என்னவென்று கூட தெரியாது.

அந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும், எப்படி கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என சொல்லித்தர யாரும் இல்லை. அதனால் தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன். அதர்வா நடிச்ச ஈட்டி படத்தில் நடிக்க டைரக்டர் என்னை தான் முதலில் கேட்டார்.

சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி ரோல் எனக்குத்தான் வந்தது. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் தவறவிட்டுட்டேன். தவிர நான் நடித்த சில படங்களும் சரியா ஓடவில்லை என வருத்தத்துடன் கூறினார்.

ஆல்யா மானசாவுக்கு ஹோட்டல் அறையில் சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ்!!

ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்துவரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி தற்போது நிஜ வாழ்க்கையிலும் காதலித்து கரம் பிடிக்கவுள்ளனர். நிற்சயதார்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணமும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவின் பிறந்தநாள் என்பதால் சஞ்சீவ் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஒரு ஹோட்டல் அறை முழுவதும் பலூன் நிரப்பு அதில் 24 பரிசு பொருட்கள் வைத்து அங்கு ஆல்யா மானசாவை அழைத்து சென்றுள்ளார்.

அவரது 24வது பிறந்தநாள் என்பதால் மொத்தம் 24 பரிசுப்பொருட்கள் அவர் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

NGK படத்தில் இருந்து நீக்கப்பட்ட கெட்ட வார்த்தைகள் : வெளியானது லிஸ்ட்!!

சூர்யவின் நடிப்பில் வரும் 31ஆம் தேதி NGK படம் பலத்த எதிர்ப்பார்ப்பு இடையே வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் முன்பதிவிற்கான வேலைகள் சில வாரங்களுக்கு முன்பு இருந்தே தொடங்கப்பட்டுவிட்டன.

மேலும் கடந்த வாரம் இப்படத்தின் தணிக்கை சான்றிதழ் U என வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளின் லிஸ்ட்டும் வெளிவந்துள்ளது.

அதில் ஒவ்வொரு ரீலுக்கும் குறைந்தப்பட்சம் ஒரு கெட்ட வார்த்தையாவது நீக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

”ஒரு குழந்தை என்ன பார்த்து எலி மாமானு சொல்றான் : எஸ்.ஜே.சூர்யா!!

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 17 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இந்த படத்தை பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு எடிட்டிங் பணிகளை சாபு ஜோசப் செய்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.இந்த படம் குறித்து பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, முதல் வாரம் வெற்றி, இரண்டாவது வாரம் இரட்டிப்பு வெற்றியானதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன்.

அனைத்து திரையரங்கிலும் சென்று பார்த்தோம். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். என்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து எனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.

இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். பாகுபலிக்கு பிறகு இப்படத்திற்கு தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.

நயன்தாரா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் தமன்னா!!

சினிமாத்துறையில் ஹீரோயின்களுக்கு நடுவே போட்டி இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் தாண்டி தற்போதும் டாப் ஹீரோயினாக இருக்கிறார் நயன்தாரா.

அவர் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து வரும் அப்படம் சாயிரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆட தேர்வாகியுள்ளாராம். அவருக்கு பெரிய ரோல் இருக்கும் என முதலில் கூறப்பட்ட நிலையில் இந்த செய்தி தமன்னா ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்காக மதம் மாறிய நடிகை மோனிகாவின் தற்போதை நிலை தான் என்ன?

 

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து பின் நடிகையாக வலம் வந்தவர் மோனிகா. அழகி, பகவதி, சண்டக்கோழி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் திருமணத்திற்காக தன் நிஜ பெயரான மாருதி ராஜ் என்பதை மோனிகா என்று மாற்றினார். கிடந்த 2014ம் ஆண்டு இந்துவாக இருந்த இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

பின் 2015ம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருக்கும் நடிகைகள் போல் இவரும் இப்போது எங்கே என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. சமூக வலைதளங்களில் கூட ஒரு அப்டேட்டும் அவரை பற்றி இல்லை.

உனக்கு வயசே ஆகாதா? முன்னணி நடிகரை பார்த்து கேட்ட ஜெனிலியா..!

நடிகர் விஜய்யின் சச்சின், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் செம ஜாலியான ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா.

அவர் தற்போது ட்விட்டரில் நடிகர் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்ட்டரை பார்த்துவிட்டு ‘என்ன இது ஜெயம் ரவி. உனக்கே வயசே ஆகாதா? மீண்டும் டீன் ஏஜ் பையன் போலவே இருக்க..” என்று பதிவிட்டுள்ளார்.

கோமாளி படத்தில் ஜெயம்ரவி பள்ளிக்கூட மாணவர் போல இருக்கும் 9வது போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு தான் ஜெனிலியா இப்படி

நடிகை ரோஜாவுடன் பூசாரி எடுத்த செல்பியால் வந்த பிரச்சனை : வைரலாகும் புகைப்படம்!!

பிரபல திரைப்பட நடிகையான ரோஜாவுடன் பூசாரி எடுத்த செல்பி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் திரைப்பட நடிகையுமான ரோஜா வெற்றி பெற்ற நிலையில், அவர் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் பகுதியில் இருக்கும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளார்.

இந்த கோவில் மிகவும் பிரபலமான ஒன்று, இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அந்தவகையில் நடிகை ரோஜா சிவன்மலை கோவிலுக்கு வந்த போது அறநிலையத்துறை ஊழியர் ஒருவர் செல்பி எடுத்துள்ளார்.
அப்போது அவர், தன்னுடைய பணியை மறந்து கொடிமரம் பகுதியில் ராஜகோபுரம் நுழைவாயிலை அடைத்து நின்றபடி செல்பி எடுத்ததால், அங்கிருந்த பக்தர்கள் எரிச்சலடைத்ததாக கூறி பிரச்சனை கிளம்பியுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

புஷ்பவனம் குப்புசாமி பேட்டிக்கு பதிலடி கொடுத்த செந்தில்-ராஜலட்சுமி : திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்!!

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் பாடும் பாடல்கள் எல்லாம் மக்களுக்கு பிடித்திருந்தது.

மேடை நிகழ்ச்சிகளை தொடர்ந்து இப்போது அதிக படங்களில் பாட ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் நாட்டுப்புற பாடல்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கொடுத்த புஷ்பவனம் குப்புசாமி, நாங்கள் உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்ற மக்கள் இசையை சிலர் தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள் என்று சிலரை குறிப்பிட்டு கூறியிருந்தார்.

இதுகுறித்து செந்தில்-ராஜலட்சுமி ஒரு பேட்டியில், மூத்த கலைஞராக நாட்டுப்புற கலைக்கு அவருடைய பங்கு மிக முக்கியமானது. நாட்டுப்புற இசை வெறும் இசை மட்டும் இல்லை, அது சாதி அரசியலைப் பேசக்கூடிய ஒரு கலை. குழந்தைகள், பெண்கள் என எங்களது பாடல்களை கேட்கிறார்கள் அதற்கு ஏற்றர் போல் தான் யோசித்து பாடுகிறோம்.

முந்தைய காலத்தில் வேலை செய்யும் கலைப்பு தெரியக் கூடாது என்பதற்காக ஆடி, பாடுவார்கள். இதை நான்தான் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றேன் என்று யாருமே சொல்ல முடியாது. ஒரே இடத்தில் உட்கார்த்து இருந்துகொண்டே பாடுவதையும் நாட்டுப்புற கலை என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் திமீராக பேசுகிறார், சரியில்லை இவர்கள் என மோசமாக அந்த பேட்டி குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கர்ப்பமாக இருப்பதை காட்ட மோசமான உடை அணிந்து நடிகை எமி ஜாக்சன் செய்த வேலை : வைரல் வீடியோ!!

நடிகை எமி ஜாக்சன் தமிழில் சில படங்களே நடித்தாலும் பெரிய பட்ஜெட் படங்களாக தான் நடித்துள்ளார். வெளிநாட்டு முகம் என்பதாலேயே அவரை படங்களில் கமிட் செய்தவர்கள் உள்ளார்கள். சினிமா பக்கம் கடந்த சில வருடங்களாக காணாமல் இருந்த அவர் தற்போது கர்ப்பமாகியுள்ளார்.

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்த மோசமான உடை அணிந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். அதில், நான் கருத்தரித்து 22 வாரங்கள் ஆகிவிட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

இவ்வளவு நாட்கள் இது பற்றி உங்களிடம் பேச வேண்டும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், இனி தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால வீடியோக்களை பதிவேற்றுவேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் Pregnancy என்ற பெயரில் உள்ளது.