30 ஆண்டுகளாக இளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை : வைரலான அவரது புகைப்படம்!!

30 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் வலம் வரும் தைவான் நாட்டு நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானவர் Stephanie Siao.

அவரது ரசிகர்கள் பலர், முப்பது ஆண்டுகள் வெற்றிகரமான நடிகையாக ஆசிய வெள்ளித்திரையில் வலம் வந்தாலும் அவர் இளமையாகிக் கொண்டே போவதாக விமர்சிக்கிறார்கள்.

பிரபல நடிகைகளான Lucy Liu, Naomi Watts, Ashley Judd மற்றும் Kylie Minogue ஆகியோர் பிறந்த அதே 1968ஆம் ஆண்டில் New Taipei நகரில் பிறந்தவர் Siao. 20 வயதில் மொடலாக களமிறங்கிய Siao, 1989இல் ரொமாண்டிக் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் வெள்ளித்திரையில் பிரபலமான Siao, தைவானின் மிக அழகான பெண் என அழைக்கப்படுகிறார். ஆகஸ்டில் 51 வயதை எட்ட இருக்கும் Siao, சமீபத்தில் சாதாரண உடையில் ஏர்போர்ட்டில் நடந்து செல்லும் படங்கள் வைரலாகியுள்ளன.

ஒரு ரசிகர், Siao பதின்ம வயது பெண்ணைப்போல் இருக்கிறார் என்று கூற, இன்னொருவர், அவர் இளமையாகிக் கொண்டே போகிறார் என்று கருத்து தெரிவிக்க, அந்த பக்கத்தை 310 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டார்கள்.

Siaoவின் அந்த படத்தைப் பார்த்து அதிர்ச்சியான ஒருவர், உண்மையாகவே அவருக்கு 51 வயதுதானா என்று கேட்க மற்றொருவர், 20 வயதுள்ள நிறைய ஆண்கள் அவரைப் பார்த்து மயங்கப் போகிறார்கள் என்கிறார்.

கணத்த இதயத்துடன் விடை கொடுத்த பிரபல நடிகை : பொது இடத்தில் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சி!!

நடிகை இலியானா விஜய் நடித்த நண்பன் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். ஹிந்தி சினிமாவின் பல படங்களில் நடித்து வந்தவர் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.

சமூகவலைதளத்தில் அதிகமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அவர் கர்ப்பமாக இருக்கிறார் என் சில வதந்திகளும் வந்து மனம் நொந்துபோனார்.

தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் சில காலம் அங்கேயே தங்கியிருந்தவர் மீண்டும் மும்பை திரும்பியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற தன் கணவரை விமான நிலையத்தில் கட்டிப்பிடித்து வழியனுப்பி வைத்துள்ளார். அந்த நெகிழ்ச்சியான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தேர்தலில் படுதோல்வியடைந்த முதல்வரின் மகள் : அவருக்கு வாழ்த்து கூறிய பிரபல தமிழ்ப்பட நடிகர்!!

மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் தோற்ற நிலையில் அவருக்கு நடிகர் ராகுல் தேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பாக போட்டியிட்டார்.

அவரை பா.ஜ.க வேட்பாளர் அர்விந்த் தர்மபுரி 70,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதையடுத்து கவிதா தனது டிவிட்டர் பக்கத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நிஜாமாபாத் தொகுதிக்கு சேவையளிக்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி, இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்துக்கு வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.

இதற்கு பதில் பதிவு செய்த வேதாளம், மழை, பரசுராம் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் ராகுல் தேவ், என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் இதற்கு நீங்கள் தகுதியானவர் தான் என குறிப்பிட்டார்.

தோல்வியடைந்த கவிதாவுக்கு ராகுல் வாழ்த்து கூறியதையடுத்து ஏன் இவ்வாறு கூறினீர்கள் என டுவிட்டரில் பலரும் அவரிடம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பு!!

தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகையும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் திகதி முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தனது கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்த நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க முடியாது. நாம் ஒரு திட்டம் போட்டால் இயற்கை அதை கலைத்து விடுகிறது என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

தேர்தலில் சுயேச்சையாக நின்று முதல்வர் மகனையே ஜெயித்த பிரபல தமிழ்ப்பட நடிகை : குவியும் வாழ்த்துக்கள்!!

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவியான நடிகை சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார்.

சுமலதா தமிழில் கழுகு, முரட்டுகாளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக மக்களவை தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதாவிடம் வேறு தொகுதி ஒதுக்கி தருகிறோம் அதில் போட்டியிடுங்கள் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி பார்த்தனர். ஆனால் அதனை ஏற்காத அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார்.

இதனையடுத்து மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் களமிறக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் காங்கிரஸார் இதனை ரசிக்கவில்லை. தங்களது முழு ஆதரவையும் நடிகை சுமலதாவிற்கே மறைமுகமாக அளித்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குமாரசாமி, ஒருகட்டத்தில் வாய்விட்டே புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் குமாரசாமி பயந்தது போலவே தற்போது மண்டியா மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முன்னிலை வகித்த நடிகை சுமலதா, இறுதி சுற்றின் போது நிகில் கவுடாவை விட 90,000 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றியை தன் வசமாக்கியுள்ளார்.

சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சுமலதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தேர்தலில் அபார வெற்றி பெற்ற பிரபல நடிகை ரோஜா!!

ஆந்திராவின் நகரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டது.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக முதல் முறையாக பதவியேற்கவுள்ளார்.

அந்த கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா அபார வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரோஜா மீண்டும் அந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

காதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ். அவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். அவர் 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே சீனியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்தாராம். அதை பெருமையாக வீட்டில் கொண்டு வந்து காட்டினாராம் அதிதி.

21 வயதில் திருமணம் அதிதி ராவிற்கு பிரபல ஹிந்தி நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் 4 வருடங்களில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
அவர்கள் பிரிந்தபிறகுத்தான் பலருக்கும் திருமணம் பற்றியே தெரியவந்துள்ளது. அதன் பிறகு தான் அதிதி சினிமாவில் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளார்.

இனி நடிக்கமாட்டேன்.. திருமணமும் செய்யமாட்டேன் : அதிர்ச்சி கொடுத்த கவர்ச்சி நடிகை!!

கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை சார்மி கவுர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக விக்ரம் நடித்திருந்த 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் நடிப்பதை நிறுத்தப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். வழக்காக நடிகைகள் திருமணம் ஆன பிறகு தான் நடிப்பதை நிறுத்துவார்கள். ஆனால் இவர் தனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

நடிப்பதை நிறுத்தினாலும் சினிமா தயாரிப்பாளராக மட்டும் தொடர்ந்து செயல்படுவேன் என அவர் கூறியுள்ளார்.

ஆமா இது எப்போ.. விஷால் விஷயத்தில் ஷாக் ஆன ராதிகா!!

விஷால் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை வீழ்த்திய கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நடிகர் சங்க தேர்ந்தல் நடக்கவுள்ளது.

இந்த முறை விஷாலும் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு இருப்பதாக தெரிகின்றது, தற்போது முன்னணி வார இதழ் ஒன்று விஷால், ராதிகாவை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

இதை பார்த்த ராதிகா ‘சீரியஸ்லீ’ என்று சிரிப்பு ஸ்மைலி போட்டு டுவிட் செய்துள்ளார், இதற்கு குஷ்புவும் சிரிப்பு ஸ்மைலி பதிவு செய்துள்ளார்.

அதாவது எனக்கே தெரியவில்லை, இது எப்போ? என்பது போல் ராதிகாவின் ரியாக்‌ஷன் அதில் இருந்தது.

அரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா : ஏன் என்று தெரியுமா?

நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி.

அந்த படத்தின் வெற்றி பற்றி வந்த முதல் செய்தியைக் கேட்டதும் அரை மணி நேரம் அழுததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார், சமந்தா.

மேலும், அதிகாலை 2.30 மணிக்கே எழுந்து ஒன்றைரை மணிநேரம் படத்தின் வெற்றிக்காகவும், கணவருக்காகவும் பிரார்த்தனை செய்தாராம்.

படத்தின் வெற்றி நாகசைதன்யாவுக்கு இந்த நேரத்தில் தேவைப்படும் ஒரு வெற்றியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.