இந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.. காஜல் உருக்கம்!!

நடிகை காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். பல டாப் ஹீரோக்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார்.

முன்பை போல் அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிக்காமல் தற்போது வருடத்திற்கு மூன்று நான்கு படங்களில் மட்டும் நடிப்பது ஏன் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “முதலில் நானும் அதிக எண்ணிக்கையில் தான் படங்கள் நடித்தேன்.

அதனால் தொடர்ந்து ஷூட்டிங் செல்லவேண்டியிருந்தது. எனக்கு நிஷா என்ற தங்கை உள்ளார். அவருக்கு திருமணம் நடைபெற்ற போது நான் தான் அருகில் இருந்து அனைத்தையும் செய்திருக்க வேண்டும். ஆனால் ஷூட்டிங் என்பதால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.

அப்போது முடிவெடுத்தேன்.. இனி அதிக படஙக்ளில் நடிக்க கூடாது என்று.. என காஜல் கூறினார்.

தொடர்ந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் பெயரில் நடக்கும் மோசடி : சோகத்தில் நடிகை!!

பிரியா பவானி ஷங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதை தாண்டி நடிக்க வந்த பிறகு தான் இவர் அதிக பிரபலமானார்.

படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பிரியா நடித்திருந்த மான்ஸ்டர் படம் அண்மையில் வெளியாகி இருந்தது.

படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, படக்குழுவும் செம ஹேப்பி. பிரியா பவானி ஷங்கர் பெயரில் டுவிட்டரில் அதிகம் போலி அக்-கவுண்ட் இருக்கிறது. அவரும் பல முறை தன்னுடைய நிஜ டுவிட்டர் பக்கம் இதுதான் என்று அறிவித்துவிட்டார்.

ஆனாலும் சில போலி அக்-கவுண்ட் அவரது பெயரை கெடுப்பது போல் சில விஷயங்கள் செய்து வருகிறார்களாம். அப்படி ஒரு போலி அக்-கவுண்ட்டை பதிவு செய்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க நிற ஆடையில் ஜொலித்த உலக அழகி : கண்ணை கவரும் புகைப்படங்கள்!!

பிரான்ஸ் நாட்டில் ரிவேரியா நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் 72-வது திரைபட விழா ஒவ்வொரு வருடமும் நடப்பது வழக்கம். அதில் முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுவார்கள்.

அதில் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வரும் நடிகை ஐஸ்வர்யா ராயின் ஆடைத் தேர்வு எப்போதுமே வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும்.

இந்த வருடம் கேன்ஸ் விழாவில் பங்கேற்கும் ஐஸ்வர்யா ராய் என்ன ஆடை அணிந்து பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு பலரிடையே இருந்தது.

அந்தவகையில் 72-வது கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் தமது மகள் ஆராத்யாவுடன் தங்க நிற ஆடை உடுத்தி ரெட் கார்பெட்டில் நடந்து வந்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த மெட்டாலிக் கோல்டு ஆடை ரெட் கார்பட் வரவேற்பில் சுற்றியிருந்த கூட்டத்தை அவர் பக்கம் ஈர்த்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய பிரபல டிவி நடிகர் கைது : நடந்தது என்ன?

சமீபகாலமாக சினிமாவை சேர்ந்த பெண்கள் பலர் மீ டூவில் பாலியல் புகார் அளித்து வந்தார்கள். இதில் சில முக்கிய பிரமுகர்களின் பெயரும் சிக்கியது. அடுத்தடுத்து இது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கத்தி முனையில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கன்னட டிவி நடிகருடன் சேர்த்து 3 பேரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

பெங்களூர் கோரமங்களா பகுதியில் இரண்டு பெண்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த மே 12 ம் தேதி ஆன்லையின் உணவு ஆர்டர் செய்த இவர்கள் உணவுக்காக காத்திருந்திந்தார்களாம்.

அப்போது இரவும் 8.20 மணியளவில் உணவு வந்துவிட்டது என கதவை திறந்து வெளியே வந்த போது மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அந்த பெண்கள் போலிசில் புகார் அளித்துள்ளனர். இதன் விசாரணையின் போது நடந்த சம்பவத்தில் கன்னட டிவி நடிகர் ராகேஷ், கார் டிரைவர் மணிகண்டா, பானி பூரி விற்கும் சூர்யா ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம் நடிகரை வெறித்தனமாக அடித்து துன்புறுத்திய போலிஸ்! மருத்துவமனையில் அனுமதி!!

சினிமா பிரபலங்கள் சிலர் சர்ச்சைகளை சந்திப்பதை சகஜமாக கருதுகிறார்கள். ஹிந்தி சினிமா பிரபலங்களுக்கு இது சர்வ சாதாரணம் போல தான். பத்திரிக்கைகளில் அடிக்கடி கிசுகிசுக்களிலும் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள்.

தற்போது ஹாட்டாப்பிக்கா ஓடிக்கொண்டிருப்பது நடிகர் Aansh Arora பற்றிய செய்தி தான். அண்மையில் இவர் தன் சகோதரர் உடன் போலிசாரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் காயமடைந்த அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே 13 முதல் 16 வரை மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

விசாரணையில் அவர் உத்தர்பிரதேஷ் காஜியாபாத் இந்திராபுரம் போலிஸ் நிலையத்தில் என்னை துன்புறுத்தினர். முதல் நாள் இரவிலிருந்து மறுநாள் காலை வரை என்னையும் என் மைனர் தம்பியையும் தொந்தரவு போலிசார் செய்தனர் என நடிகர் கூறியுள்ளார்.

எல்லாவற்றிக்கும் காரணம் சாப்பிடும் இடத்தில் ஹோட்டல் ஊழியர்களுக்கு இவருக்கும் நடந்த தகராறு தானாம்.

எனக்கு விருப்பமே இல்லை : சாமி2 படக்குழு மீது ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி குற்றச்சாட்டு!!

காக்கா முட்டை, வடசென்னை என பல படங்களில் தன் நடிப்பு திறமையை நிரூபித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். விக்ரம்-ஹரி கூட்டணியில் வெளியான சாமி படம் ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை சென்ற வருடம் வெளியிட்டனர். முதல் பாகத்தில் திரிஷா நடித்திருந்த ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தம் ஆனார், ஆனால் அவர் பின்னர் நடிக்கமுடியாது என கூறி ஒதுங்கிக்கொண்டார். இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் பற்றி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார். “நான் இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை.

ஆனால் விக்ரம்-ஹரி என்னை பர்சனலாக கேட்டுக்கொண்டதால் ஒப்புக்கொண்டேன். வேறு எந்த நடிகையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என அவர்கள் கூறியதும் ஒரு காரணம்” என கூறியுள்ளார்.

சில காட்சிகளில் மட்டுமே வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பை பற்றி இந்த படத்தை பார்த்த பலரும் மோசமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

31 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன் : பிரபல நடிகை கூறிய காரணம்!!

நடிகை சார்மி கவுர் 1987ஆம் ஆண்டு மும்பையில் மஹாராஷ்டிராவில் பிறந்தவர். இவர் தனது 15 வயதில் இருந்தே ஹீரோயினாக நடித்து வருகிறார். 2002ம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் சிம்பு நடித்த கடந்த அழிவதில்லை படத்தில் நடித்தார். மேலும் ஆஹா அப்படித்தான், லாடம் ஆகிய படங்களில் நடித்தார்.

வாய்ப்புகள் குறைந்து போன பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி பூரி ஜெகனாத்துடன் இணைந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது சார்மிக்கு 31 வயது கடந்துவிட்டது. அவரிடம் இன்னும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டால், அதற்கு அவர் ‘இப்பொழுது எனது முழு கவனம் சினிமாவில் மட்டுமே உள்ளது. திருமணம் செய்த பிறகு கணவர், குழந்தை இவர்கள் மீது கவனம் செலுத்த முடியாது’ என்று பதிலளித்துள்ளார்.

தொலைக்காட்சி பிரபலம் கறுப்பழகி கேப்ரெல்லாவுக்கு திருமணம் : மாப்பிள்ளை இவர்தானாம்!!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கேப்ரெல்லா. நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ஐரா படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் டிக்டாக்கிலும் அவ்வப்போது கருத்தான வீடியோக்களை வெளியிடும் இவரை நெட்டிசன்கள் கறுப்பழகி என்று அழைப்பர். இந்நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலரான ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை கரம் பிடிக்கவுள்ளார்.

இதுகுறித்து கேப்ரெல்லா கூறுகையில், ஒரே தொழிலில் இருந்து, ஒத்த எண்ணம் கொண்ட இருவரால்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். நல்லது; கெட்டது என எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி என்னிடம் சொல்வார். இருவரும் காதலை பரிமாறினோம்.

வீட்டுக்குச் சொல்ல வேண்டுமே… நானே, அவருடைய அப்பாவுக்கு போன் செய்து, ஆகாஷ் மீதான எனது காதலையும்; என் மீதான அவர் காதலையும் சொன்னேன். நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ஜனவரியில் திருமணம் என்றார்.

மார்பக அறுவை சிகிச்சை செய்து வீடியோவை வெளியிட்ட போர்ன் பட நடிகை மியா கலிஃபா : சர்ச்சை நடிகையின் அதிரடி!!

மியா கலிஃபா என்றால் இளம் தலைமுறைகளில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆபாச படங்களில் நடிக்கும் இவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இளம் நடிகையான இவர் பல போர்ன் ஸ்டார்களுடன் நடித்திருக்கிறார்.

அண்மையில் தன் விரும்பும் காதலரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார். இதுவே அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் தான். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மார்பில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் அவர் ஐஸ் ஹாக்கி விளையாட்டை பார்க்க சென்ற போது டிஸ்க் போன்ற பந்து அவரின் மீது 80 மைல் வேகத்தில் இடது பக்க மார்பில் மோதியது. இதற்காக தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டாராம்.

நடிகர் கமல் மீது செருப்பு வீசியவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய எச்.ராஜா : பிக்பாஸ் காயத்ரி கண்டனம்!!

நடிகர் கமல்ஹாசன் நேற்று பங்கேற்ற அரசியல் கூட்டத்தில் அவர் மீது செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டது. கமல் ஹிந்து மதம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.

கமல் மீது செருப்பு வீசிய நபருக்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார்.

இதற்கு பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். கமலுக்கு தண்டனை சட்டப்படி தான் இருக்கவேண்டும், இப்படி அல்ல! என அவர் மேலும் கூறியுள்ளார்.