தன்னை தானே சிறையில் பூட்டிக்கொண்ட முன்னணி நடிகை!!

சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு மற்றும் தோன்றியவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் சிறையில் இருப்பது பல உள்ளது. விபச்சாரம் நடக்கும் இடங்களில் பெண் குழந்தைகள் இப்படி சிறிய இடத்தில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துகின்றனர் என்பதை வலியுறுத்தும்விதமாக தான் மல்லிகா இப்படி செய்துள்ளார்.

அவர்களுக்காக அனைவரும் போராட முன்வரவேண்டும் என நடிகை வலியுறுத்தியுள்ளார். இதற்காக நடிகையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் மூத்த நடிகை : அதிர்ச்சியில் தயாரிப்பாளர்!!

நடிகை நயன்தாரா தான் தற்போது தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகை. சோலோ ஹீரோயினாக நடித்து ஹிட் கொடுத்தவரும் அவர் 4 முதல் 5 கோடிக்கு கீழ் தான் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகை விஜயசாந்தி நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். இது அந்த படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிரபல நடிகை சார்மி எடுத்த அதிரடி முடிவு, ரசிகர்கள் சோகம்!!

சார்மி சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிவிட்டார்.

அங்கு இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்க, தமிழில் லாடம், 10 எண்றதுக்குள்ள என ஒரு சில படங்களில் மட்டுமே தலையை காட்டினார்.

இந்நிலையில் சார்மி இனி படங்களில் நடிப்பது இல்லை என்று ஒரு முடிவெடுத்துள்ளாராம், அதை விட எனக்கு நடிக்க ஆர்வமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், படங்களில் தயாரிக்கவே தான் மிக ஆர்வமாக உள்ளதாக சார்மி கூற, இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்துள்ளது.

சிவகார்த்திகேயனை மீண்டும் சீண்டிய அருண்விஜய் : ரசிகர்கள் கொந்தளிப்பு!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று மிஸ்டர் லோக்கல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்திலேயே ‘நீயெல்லாம் மாஸ் காட்ட ஆரம்பிச்சுட்ட்’ என்று சதீஷ் கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் ‘என் மேல ரொம்ப காண்டுல இருக்கீங்க போல’ என்று அருண்விஜய் முன்பு பேசியதற்கு பதிலடி கொடுத்தார்.

ஆனால், இன்று அருண்விஜய் டுவிட்டரில் கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஸ்மைலியை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகின்றார் என கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அதற்கு அடுத்த டுவிட்டே, என் அடுத்தப்படத்தின் அறிவிப்பை நானே தெரிவிப்பேன், வேறு எதனையும் நம்பாதீர்கள் என டுவிட் செய்துள்ளார், இவர் எதற்கு அந்த ஸ்மைலியை போட்டார் என தற்போது வரை பலருக்கும் தெளிவாக தெரியவில்லை.

மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு புகார்!!

மாரடைப்பால் இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக, அவருடைய வீட்டு பணியாளர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்த நிலையில் அவருடைய மனைவி மீது வீட்டில் வேலை செய்து வந்த கேசவன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 10 ஆண்டுகளாக ஜே .கே .ரிதீஷிடம் தான் பணியாற்றி வருவதாகவும். அவர், அவருக்கு சொந்தமான வீட்டில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் தங்கி கொள்ளுமாறு கொடுத்து விட்டார் எனவும்.

இதனால் அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவருடைய மனைவி ஜோதி, தனக்கு வர வேண்டிய தொகை ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும் என, அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே போல் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஜோதியிடம் வீட்டை கொடுத்துவிட்டு ஓடிவிடு என, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்ட அயோக்கியா ஹீரோயின்!!

சமீபத்தில் வெளிவந்த அயோக்யா படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. டெம்பர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் விஷால்-ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

ராசி கன்னாவிற்கு பிரபல நடிகை ரவீனா தான் டப்பிங் செய்திருந்தார். ஆனால் அயோக்யா படத்தில் முடிவில் வரும் end creditsல் டப்பிங் பேசியவர்களின் பெயர்கள் இடம்பெறவே இல்லையாம். அதை ட்விட்டரில் குறிப்பிட்டு ரவீனா வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதை பார்த்த ராசி கண்ணா ரவீனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். படக்குழு செய்த தவறுக்கு நடிகை மன்னிப்பு கேட்டிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகைநடிகைகள்!!

கடந்த புதன்கிழமை குவாஹதி என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. அந்த குண்டுவெடிப்பில் 12 பேருக்கு காயம் ஏற்பட உடனே அசாம் போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பும் பணியை விரைந்து செய்தனர்.

பின் இந்த சம்பவத்திற்கு பின் இருப்பவர்களை விசாரிக்க ஆரம்பித்தனர். அதில் வந்த தகவல் என்னவென்றால் பிரபல சீரியல் நடிகையாக ஜஹனபி சைகா சம்பந்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

உடனே போலீசார் நடிகையை மற்றும் அவரது கூட்டாலிகளையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வட்டமான 35 புல்லட்சும், 40 கிலோ வெடி மருந்தும் 9 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சஞ்சீவ் : பிரச்சனைக்கான தீர்வு தெரியாமல் சோகத்தில் குடும்பம்!!

ராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் படு பிரபலம். சீரியல் வெற்றி காரணமாக அதில் நடிப்பவர்களும் மக்களிடம் அதிகம் நெருங்கிவிட்டார்கள்.

அவர்களை பற்றி தெரிந்துகொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்போது இந்த சீரியலில் இருந்து சிலர் படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்றனர். அந்த சீன்கள் எல்லாம் முடிந்துவிட்டது.

ரீலில் இருந்து ரியல் ஜோடியாக மாறியுள்ள சஞ்சீவ்-ஆல்யா மானசா ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் சஞ்சீவ் பேசும்போது, எனக்கு சிறுவயதில் இருந்தே ஒரு பிரச்சனை இருக்கிறது, அதற்கு பெயர் அல்டோஃபோபியா என்று பெயர், அதற்கு என்ன அர்த்தம் என்றால் உயரத்தைக் கண்டு பயப்படுவது தான்.

இந்த பிரச்சனையால் சஞ்சீவ் பல கிண்டல்களை சந்தித்துள்ளாராம். சிங்கப்பூரில் ராஜா ராணி படப்பிடிப்பில் உயரத்தில் நடிக்கும் காட்சி வர அப்போது இந்த விஷயம் குறித்து இயக்குனரிடம் கூறினேன். அதைக்கேட்டு அவர் இதையெல்லாம் சரி செய்துவிட்டு அல்லவா நீங்கள் நடிக்க வந்திருக்க வேண்டும் என்று திட்டினார்.

இந்த பிரச்சனையால் நான் பட்ட முதல் அவமானம் அது என வருத்தமாக பேசியுள்ளார். உடனே ஆல்யா மானவா இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதே தெரியவில்லை, நண்பர்களிடம் கேட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

ஆபாசமாக பேசி மிரட்டுகிறார் : மறைந்த நடிகர் ரித்திஷின் மனைவி மீது பரபரப்பு புகார்!!

நடிகர் ரித்திஷ் சமீபத்தில் மாரடைப்பால் இறந்தார். இதை தொடர்ந்து, அவருடைய சொத்துக்கள் சென்னையிலும், வேறு சில இடங்களிலும் இருப்பதையெல்லாம் அவரது மனைவி ஜோதி தேடி கண்டுபிடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜோதி மீது சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் ரித்திஷின் உதவியாளரான கேசவன் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடிகர் ரித்திஷிடம் இருந்து வந்தேன். அவருக்கு உதவியாளராக இருந்ததால், அவருக்கு சொந்தமான வீடு ஒன்றில் என்னை தங்க வைத்திருந்தார்.

அந்த வீட்டுக்கு வாடகையாக எதுவும் கொடுக்கவில்லை. அதேப்போல, அவருக்கு உதவியாளராக பணியாற்றிய கால கட்டங்களில் எனக்கு அவர் பணம் எதுவும் கொடுக்கவில்லை. இந்நிலையில், ரித்திஷ் இறந்து போனதும், வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லி, ரித்திஷின் மனைவி ஜோதி, என்னை தொடர்பு கொண்டு வீட்டை காலி செய்யச் சொன்னார். அப்படியென்றால், ரித்திஷிடம் நான் பணிபுரிந்ததற்கான பணம் நான்கு லட்ச ரூபாயைக் கொடுங்கள் என்று கேட்டேன்.

அதற்கு மறுத்து விட்டார். அதனால், நான் வீட்டை காலி செய்யவில்லை. உடனே, அடியாட்களை விட்டு என்னை மிரட்டியவர், ஆபாசமாகவும் என்னிடம் பேசினார். தொடர்ந்து, அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்.

அதேபோல, இந்த விஷயத்தில் தன்னையும் நுழைத்துக் கொண்டிருக்கும் தொழில் அதிபர் ஐசரி கணேஷ், மரியாதையாக வீட்டை காலி செய்து, ஜோதியிடம் ஒப்படைத்துவிடு; இல்லையென்றால், உனக்கு பெரிய சிக்கல் வரும் என மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கேசவன் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரை அடுத்து, பாண்டி பஜார் போலீசார், நடிகர் ரித்திஷின் மனைவி ஜோதியிடம் விசாரித்து வருகின்றனர்.

தூக்கில் சடலமாக தொங்கிய நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர்!!

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்ஸின் உதவியாளர் பரத். இவர் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களோடு சேர்ந்து வசித்து வந்தார்.

மாற்றுத்திறனாளியான இவர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் குழந்தைகள் உள்பட பல திரையுலக பிரபலங்களின் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், நேற்றிரவு தனது வீட்டில் பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா தான் வாழ்க்கை என்றிருந்த அவருக்கு சினிமாவில் எதுவும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் கூட தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.