திருமணத்திற்கு பிறகு அந்த வார்த்தையை ஆர்யா சொல்லமாட்டார்.. கலாய்த்த நடிகர்!!

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா சமீபத்தில் தான் திருமணம் செய்துகொண்டனர். ஆர்யா எப்போதும் மற்ற பல நடிகர் மற்றும் நடிகைகளிடம் நெருக்கமாக இருப்பவர்.

த்ரிஷாவை ‘குஞ்சுமணி’ என பல முறை ஆர்யா கூறியுள்ள நிலையில், இன்று த்ரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை ஆர்யா.

அதை கலாய்த்து நடிகர் சதிஷ் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா அந்த வார்த்தையை மட்டும் சொல்லமாட்டார் என அவர் ட்ரோல் செய்துள்ளார்.

மதம் மாறிவிட்டாரா நடிகை கஸ்தூரி? புகைப்படத்தால் வந்த குழப்பம்!!

நடிகை கஸ்தூரி சினிமாவை தாண்டி அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றியும் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். முஸ்லீம் பெண்கள் அணியும் உடையில் தான் அவர் உள்ளார்.

தெளிவாக கஸ்தூரி அந்த பதிவில் எதுவும் குறிப்பிடாததால் அதை பார்த்தவர்கள் இவர் மதம் மாறிவிட்டாரோ என குழப்பம் அடைந்துள்ளனர்.

நயன்தாராவிற்கு நிச்சயத்தார்த்தம் உறுதியானது : முழுவிவரம் இதோ!!

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.

இதில் சோலோ ஹீரோயினாகவே நிறைய படங்கள் இருக்கின்றது. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிவிங்-டு-கெதரில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா குடும்பத்தினர் விக்னேஷ் சிவனை சந்திக்க, இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் நிச்சத்தார்த்தம் நடக்கும் என கூறப்படுகின்றது. மேலும், இதற்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி- ரசிகர்கள் ஷாக்!!

மாலிவுட் சினிமாவில் நிறைய பாடல்கள் பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரிமி டாமி. இவர் 50க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி அசத்தியுள்ளார், அதில் நிறைய ஹிட் பாடல்களும் உண்டு.

பாடுவதை தாண்டி அதிக நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக கலக்கி வந்தார். உதாரணத்துக்கு Gaanaveedhi, Dum Dum Dum Pi Pi Pi, Music Live போன்ற நிகழ்ச்சிகளை கூறலாம்.

இவர் 2008ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி இருவருக்கும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. தற்போது என்னவென்றால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகிறது, ஆனால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை.

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஒரு நாள் சம்பளம் இத்தனை லட்சமாம் : படையெடுக்கும் கூட்டம்!!

தற்போது சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் காமெடி நடிகர் யோகி பாபு. அவருக்கு நல்ல வரவேற்பு குவிந்துள்ளது. படங்களில் அவர் வந்தாலே தியேட்டரில் விசில் சத்தமும், சிரிப்பும் நிறைந்து வழிகிறது.

இதனால் அனைத்து படங்களிலும் அவரை புக் செய்துவிடுகிறார்கள். கால்ஷீட் விசயத்தில் அவர் மிக பிசியாக இருக்கிறார். கடந்த வருடம் மட்டும் 20 படங்களில் நடித்துள்ளார். இதில் சர்கார், கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள் அவருக்கும் முக்கியமானதாக அமைந்தன.

ஆனால் இந்த வருடம் அவருக்கு 19 படங்கள் இப்போது வரை உள்ளதாம். தற்போது அவர் தர்ம பிரபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது சம்பளத்தை ஒரு நாளுக்கு ரூ 5 லட்சம் என உயர்த்திவிட்டாராம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற நடிகை வரலட்சுமி : உடையில் இருந்த விசயத்தை கண்டு மெர்சலான ரசிகர்கள்!!

தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் ஃபீவர் என்று சொல்லலாம். கடந்த சில தொடர்ந்து பல அணிகளுக்கு இடையே முக்கிட இடங்களில் போட்டி நடைபெற்று வருகிறது.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தற்போது டெல்லி அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் சென்னையில் போட்டி நடைபெற்று வருகிறது. இதனை காண மைதான அரங்கில் பல ரசிகர்கள், ரசிகைகள் குவிந்துள்ளார்கள்.

நடிகை வரலட்சுமியில் கிரிக்கெட்டுக்கு தீவிரமான ரசிகை. அவர் மைதானத்தில் தல தோனியின் புகைப்படம் கொண்ட மஞ்சள் டிசர்ட்டை போட்டு கொண்டாடியுள்ளனர்.

பொது இடத்தில் மனைவியின் வயிற்றை தொட்டு காட்டி சேதி சொல்லிய பிரபல நடிகர்!!

சினிமா பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்கள் தெரிந்து கொள்ள ரசிகர்களுக்கு ஆசையாக தான் இருக்கும். அதில் சில விஷயங்கள் புகைப்படங்கள் மூலமாக வெளியாகிவிடும்.

தற்போது தெலுங்கு சினிமா பக்கம் பலருக்கும் மகிழ்ச்சி சூழ்ந்துள்ளது. பிரபல நடிகர் மஞ்சு மனோஜ், நடிகை லக்‌ஷ்மி மஞ்சுவின் சகோதரர் நடிகர் விஷ்ணு மஞ்சு சந்தோசத்தில் மூழ்கியுள்ளார்.

விஷயம் என்னவெனில் அவரின் மனைவி விரானிகா கர்ப்பமாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை விஷ்ணு தன் மனைவியின் வயிற்றில் பொது இடத்தில் கைவைத்து சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே இந்த தம்பதிக்கு 2011 ல் Ariaana, Viviana என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2018 ல் Avram என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது விரானிகா நான்காவது குழந்தைக்கு கர்ப்பமாகியுள்ளார்.

இது ரசிகர்கள் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசயத்திற்கு நடிகை சுஜா வருணி டிவிட்டர் மூலம் நடிகர் விஷ்ணுவுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

இளம் நடிகைகள் செய்த கேவலமான செயல் : வலையில் சிக்கிய பிரபல நடிகர் – போலிசை அதிர்ச்சியாக்கிய சம்பவம்!!

சமீபகாலமாகவே நடிகைகள் சிலர் பாலியல் புகார்களை Me Too ல் கூறி வந்தனர். இதில் சில நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிக்கினர். தற்போது மராத்தி சினிமாவை சேர்ந்த ரோஹினி, ஷாரா சரவான் ஆகிய இருவர் பிரபல நடிகர் சுபாஷ் யாதவை பாலியல் சர்ச்சையில் சிக்கவைத்துள்ளனர்.

நடிகைகள் இருவரும் சுபாஷை தொடர்பு கொண்டு தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமானால் இருவருக்கும் ரூ 15 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதற்காக 2 போலிஸ் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் பயந்து போன சுபாஷ் ரூ 1 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் தொடர்ந்து நடிகைகள் இருவரும் பணம் கேட்டு மிரட்டியதால் அவர் போலிசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனால் சம்மந்தப்பட்ட நடிகைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குற்றத்தில் ஈடுப்பட்ட 2 போலிசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

சுருட்டு பிடிக்கும் ராதிகா : சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்!!

ராதிகா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறக்கின்றார். அவர் தற்போது சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் தான் ஹீரோவாக நடிக்கின்றார். அப்படியிருக்க இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்தது.

இதில் ராதிகா சுருட்டு பிடிக்கும்படி இருக்க, அந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதோ…

சீரியல், சினிமா பிரபல நடிகரை கேவலமான செயலை செய்ய கூப்பிட்ட சம்பவம் : அதிர்ச்சியான இளம் ஹீரோ!!

சினிமா வட்டாரத்தை அண்மையில் சீரழித்த நிகழ்வு Me Too பாலியல் பிரச்சனைகள் தான். நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் பற்றி இதில் பகிரங்கமாக புகார் அளித்தார்கள்.

இந்நிலையில் தற்போது முதன் முதலாக நடிகர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் வேறு யாருமல்ல ஹிந்தி சினிமாவை சேர்ந்த விவேக் தஹியா தான்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த அவர் பெரிய சினிமாவுக்குள்ளும் வந்துவிட்டார். அவர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

இதில் அவர் பட வாய்ப்புகளுக்காக சினிமா மீடியேட்டர்களை அணுகிய போது தன்னை தவறான பாதைக்கு அழைத்தார்கள். ஆனால் அந்த மாதிரியான கேவலமாக செயல்களில் ஈடுபட மனமில்லாமல் அதனை ஒதுக்கிவிட்டேன் என கூறியுள்ளார்.