சுய இன்பத்தில் ஈடுபட்ட நடிகையை வைத்து பிரச்சாரம் செய்த கும்பல் : கொச்சை போஸ்டரால் கடும் சர்ச்சை!!

நடிகைகள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதிலும் பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு இதுமிகவும் சாதாரண ஒன்று. ஆனால் படத்தின் விசயங்களால் கடும் எதிர்ப்புகளை சம்பாதிப்பவர்களும் உண்டு.

அதில் இளம் நடிகை Swara Bhaskar ம் ஒருவர். Veer Di Wedding என்ற படத்தில் சுய இன்ப காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கியவர். இதனால் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது.

தற்போது தேர்தல் காலம். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சுவாரா பாஸ்கர் போல நடந்துகொள்ளாதீர்கள். ஓட்டுக்காக உங்கள் விரலை பயன்படுத்துங்கள் என வரிகள் இடம் பெற்ற பதாகைகளை தாங்கி சிலர் பிரச்சாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற திருமண ஏற்பாடு : திடீரென மாறிய யாரடி நீ மோகினி நாயகியின் காதலன்!!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் ஹீரோயினாக நட்சத்திரா என்பவர் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக சீரியலில் நடிக்கும் ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ராம்தேவ் உடன் இவருக்கு காதல் இருப்பதாக முதலில் செய்தி வந்தது. இந்த செய்திகள் வந்து சில மாதங்கள் கழித்து ,தற்போது அது உண்மையில்லை என்று புதிதாக ஒரு செய்தியை கூறியுள்ளார் நட்சத்திரா

இது குறித்து அவர் கூறியதாவது… நான் காதலிப்பது உண்மைதான். அந்த காதலுக்கு நான் வீட்டிலும் அனுமதி வாங்கி விட்டேன். இருவர் வீட்டிலும் பேசி கிட்டதட்ட திருமணம் வரை சென்று விட்டோம். ஆனால் நான் காதலித்தது ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் நடித்த ஹீரோ இல்லை, அந்த படத்தில் நடித்த வில்லனைத்தான் நான் காதலித்தேன் என்று கூறியுள்ளார் .

இந்த படத்தில் தமிழ் என்பவர் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் நடித்த போது இருவரும் அறிமுகமாகி நட்பு பின்னர் காதலாக மாறியது. தற்போது நாங்கள் சில வருடங்களாக காதலித்து வருகிறோம்.

வீட்டிலும் சொல்லிவிட்டோம். அவர் தற்போது கன்ஸ்ட்ரக்சன் பிசினஸ் செய்கிறார். நான் இன்னும் சில சீரியல்களில் நடிக்கிறேன் விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று கூறியுள்ளார் நட்சத்திரா.

ஒரே ஒரு டுவிட் போட்டு அஜித் ரசிகர்களிடம் மோசமாக திட்டுவாங்கும் தொகுப்பாளினி பாவனா!!

தொகுப்பாளினி பாவனா பிரபல தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியுள்ளார். அவரும், சிவகார்த்திகேயனும் இணைந்து தொகுத்து வழங்கிய நடன நிகழ்ச்சியை யாராலும் மறக்கவே முடியாது.

சமீபத்தில் கூட ரியோவுடன் இணைந்து நடன நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார், பின் டிவி பக்கம் காணவில்லை. அதற்கு பதிலாக விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பக்கம் சென்றுவிட்டார்.

இன்று அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறினார், பிறகு இன்னொரு தல மற்றொரு இடத்தில் விளையாடவுள்ளார் என டுவிட் போட்டார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் அவர் மட்டும் தான் தல வேறு யாரும் கிடையாது என மோசமாக திட்டி வருகின்றனர்.

நள்ளிரவில் ஆரவுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஓவியா!!

ஓவியா நேற்று முன்தினம் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓவியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவ் கலந்து கொண்டுள்ளார்.

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஓவியா ட்வீட் செய்துள்ளார். மேலும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஓவியா கேக் கட் செய்தபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் ஆரவ். ஆரவும், ஓவியாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் ஓவியாவோ காதலிக்க நேரமில்லை என்கிறார்.

ஓவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDOviyaa என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்வீட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

உடல் எடை குறைத்து படு ஒல்லியாக மாறிய மீரா ஜாஸ்மின் : வைரலாகும் புகைப்படம்!!

சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மின், கேரளாவின் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப்.

2001 ஆம் ஆண்டு சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் மீரா ஜாஸ்மினுக்கு தொட்டதெல்லாம் பொன்னானது. தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்தார்.

2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான மெண்டலின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மீரா.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் படு பருமனாக மாறிபோன மீரா ஜாஸ்மின் தற்போது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

ஓட்டு போட சென்ற இடத்தில் அசிங்கமான செயல் : குடும்பத்துடன் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!!

நடிகை ஐஸ்வர்யா ஏக் தில் ஹை முஷ்கில் படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். திருமணத்திற்கு பின் மீண்டும் அவர் இதில் படுகவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை கிளப்பியது.

அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அவர் வட இந்தியாவில் நேற்று நடந்த தேர்தலில் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருடன் சென்றுள்ளார்.

இதில் அவர்கள் நால் வரும் ஓட்டு போட்டுவிட்டு நடுவிரலை காட்டியது தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த விசயத்தில் பலரும் அவர்களை சமூகவலைதளத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஆனால், உண்மையாகவே இந்த போஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்தது, அதை தற்போது யாரோ இணையத்தில் புதியது போல் வெளியிட்டு சர்ச்சையை உண்டாக்கி வருகின்றனர்.

உங்க அம்மா தான் அது : ரசிகர்களுக்கு பதிலடி தருகிறேன் என்று மோசமாக பேசிய ஓவியா!!

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இதன் பிறகு பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், 90எம் எல் என்ற படத்தில் நடித்து பெரிய விமர்சனங்களை சந்தித்தார், நேற்று தன் பிறந்தநாளுக்காக ரசிகர்களுடன் உரையாடினார்.

அபோது இவரை ரசிகர் ஒருவர் மோசமான வார்த்தையில் திட்ட, அதற்கு ஓவியா, உங்கம்மா தான் அது’ என்று மிக மோசமாக பதிலடி தந்தது பலருக்கும் ஷாக் தான்.

தாலியை கழற்றி வைத்துவிட்டு போட்டோஷூட்? பிக்பாஸ் சுஜா வருணி சர்ச்சைக்கு விளக்கம்!!

பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி சென்ற வருடம் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ்வை திருமணம் செய்துகொண்டார். மேலும் சுஜா தற்போது கர்பமாக உள்ளதாக வந்த அறிவிப்பும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. விரைவில் வளைகாப்பும் நடக்கவுள்ளது.

இந்நிலையில் சுஜா வருணி தாலியை கழட்டி வைத்துவிட்டு ஒரு போட்டோஷூட் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஆனால் அது 7 வருடங்களுக்கு முன்பு எடுத்தது என சுஜா விளக்கம் கொடுத்துள்ளார். “தாலியைக் கழற்றி வைத்துவிட்டு ஃபோட்டோஷூட் நடத்த, நான் அலைபாயுதே ஷாலினியும் கிடையாது” என பதில் கொடுத்துள்ளார் அவர்.

எவ்ளோ அசிங்கம் இது.. செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஜோடியை கிழித்த முன்னணிப் பாடகர்!!

ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடிக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மட்டும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.

“பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம்.. மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துகொன்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்” என புஷ்பவனம் குப்புசாமி தாக்கி பேசியுள்ளார்.

“இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா?, பாடுவதை நிறுத்திவிடலாமா என யோசிக்கிறேன்”.
மேலும் டிவி ரியாலிட்டி ஷோகளில் நடப்பது எதுவும் ரியாலிட்டி இல்லை.

யார் வெற்றி பெற வேண்டும் என முதலில் முடிவு செய்துவிட்டு பின்னர் அனைத்து விஷயங்களையும் செய்து அவர்களை வெற்றி பெற வைப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

அடக்கம் செய்யப்பட்ட நடிகர் ரித்தீஷின் உடல் : மகள் மீது உயிரையே வைத்திருந்தார் என கதறி அழுத உறவுகள்!!

மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்னர் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மரணம் அடைந்த ரித்தீஷ் உடல், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோ‌ஷன், ஹாரிக் ரோ‌ஷன் என்ற மகன்களும், தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

மகள் தானவி மீது ரித்திக் தன்னுடைய உயிரையே வைத்திருந்ததாக கூறி உறவினர்கள் கதறி அழுத காட்சிகள், அங்கிருந்த அனைவரின் மனதையும் உலுக்கும் விதமாக இருந்தது.