இளம் பெண்ணை ஹீரோயினாக்குகிறேன் என பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தயாரிப்பாளர்!!

இப்போது சினிமா மோகம் பலரையும் தொற்றிக்கொண்டுள்ளது. இதில் நடிக்க வாய்ப்பு தேடி பலரும் வருகிறார்கள். இதில் நடிகையாக வேண்டும் என நினைப்பவர்கள் சில பாலியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அண்மையில் பலரும் மீ டூவில் பாலியல் புகார் அளித்து வந்தனர்.

தற்போது தெலுங்கில் சினிமாவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கசிந்துள்ளனர். ஒருவர் தன்னை தயாரிப்பாளர் என 19 வயது பெண்ணிடம் அறிமுகப்படுத்தி 2016 ல் பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

பின் போனில் தொடர்புகொண்டு அந்த பெண்ணிடம் பழகி தன் வீட்டு வரசொல்லி ஆடிசன் செய்கிறேன் என கூறியுள்ளார். பின்னர் அந்த தயாரிப்பாளர் அந்த பெண்ணை தன் காம இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார்.

பின் அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை வைத்து பிளாக் மெயில் செய்து பல முறை தன் ஆசைக்கு இணங்க வைத்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது போலிசில் புகார் அளிக்க விசாரணையில் அவன் போலியான ஆசாமி என்பது தெரியவந்துள்ளது.

வைரலான நடிகை குஷ்புவின் கவர்ச்சி புகைப்படம் : ரசிகர் கேட்ட கேள்வி!!

நடிகையும், தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவின் கவர்ச்சியான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, அந்த புகைப்படம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் குஷ்பு.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு, இது என்ன உங்கள் தேனிலவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா? அல்லது சுற்றுலாவுக்கு சென்றபோது எடுத்த புகைப்படமா என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, அது எனது தேனிலவு புகைப்படம் கிடையாது. எனது திரைப்படங்களில் நான் இதுபோன்ற ஆடையை அணிந்தது கிடையாது. இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பதிவிட்டு பரபரப்பாக செயல்பட்டு வரும் குஷ்பு, இதற்கு இடையிலும் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

பிக் பாஸ் ஜூலியால் பறிபோன வாய்ப்புகள் : போராடி ரீஎண்ட்ரி ஆகும் பிரபல சின்னதிரை நடிகை!!

சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் என்றாலும் சில காலமாக சீரியல்களில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் நடிகை ஜூலி.

இவர் ஒரு முன்னணி தொலைக்காட்சியின் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே மற்றொரு டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதன் காரணமாக சீரியல்களில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன் என தெரிவித்துள்ளார் ஜூலி.

மேலும் பிக் பாஸ்’ ஜூலியால் தன் வாய்ப்புகள் பறிபோனதாக அவர் இதற்கு முன்பு குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நீண்ட காலம் வீட்டில் இருந்த அவர் தற்போது பல டிவி சேனல்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘சத்யா’ சீரியலில் சித்தி ரோலில் நடிக்க வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

காஜல் அகர்வால் செய்த காரியத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் காஜல் அகர்வால். அவர் தற்போது சீதா என்கிற தெலுங்கு படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு நான் சென்றேன். அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் இல்லாததை பார்த்தேன். அவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்ட பணம் கொடுத்தேன்.

என்னை பார்ப்பவர்கள் அனைவரும் திருமணம் எப்பொழுது என்று கேட்கிறார்கள். நான் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

திருமணம் செய்ய முடிவு செய்யும்போது அது குறித்து நானே அறிவிப்பு வெளியிடுகிறேன். தற்போது பாரீஸ் பாரீஸ் பட ரிலீஸுக்காக காத்திருக்கிறேன் என்றார்.

திருமணத்திற்கு முன்பே நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறக்க போகிறது : வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருசிலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அப்படி வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய சினிமா படங்களில் கலக்கி இருக்கிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக ரஜினியின் 2.0 படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை பற்றி பேசாத நபரே இல்லை என்று கூறலாம். அண்மையில் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்த எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.

அவரே தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?

தகுதியும் திறமையும் அழகாக சங்கமித்த நடிகை ஐஸ்வர்யா ராய். அழகி என்றவுடன் அனைவரும் உடனே சொல்லும் பெயர் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகி பட்டம் பெற்ற இவர், 45 வயதாகிவிட்டபோதிலும் இன்றும் இளமையுடன் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியம் : ஐஸ்வர்யா ராய் பிங்க், பிரவுன் கலர் லிப்ஸ்டிக்குளை தனது சருமம் மற்றும் உடைக்கு ஏற்றது போலவும், கண்களுக்கும் போடுவாராம்.

சருமத்திற்காக வெள்ளரிக்காய், கடலை மாவு, பால் மற்றும் மஞ்சள் கலந்து மாஸ்க்கையும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக யோகர்ட்டை பயன்படுத்துவதுடன் அடிக்கடி தனது முகத்தை சுத்தமான நீரில் கழுவிக் கொள்வாராம்.

ஆயுர்வேதப் பொருட்களை மட்டுமே உபயோகிப்பார். வீட்டு சமையல் பொருட்களையே மேனி பராமரிப்புக்கும் பயன்படுத்துவார். இரவு உறங்கச் செல்லும் முன் மேக்கப் கலைக்க ஐஸ்வர்யா பயன்படுத்துவது சுத்தமான பசும் பால்.

ஐஸ்வர்யா ராயின் உணவு ரகசியம் : ஐஸ்வர்யா ராய் தனது உணவில் வேகவைத்த உணவுகள், நார்சத்து மிகுந்த உணவுகள் ஆகிய உணவுகளை சாப்பிடுவாராம்.

அதிலும் பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகமாக அடிக்கடி எடுத்துக் கொள்வதுடன், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவாராம்.

மேலும் இவர் உடலையும் மனதையும் சீரான முறையில் பராமரிக்க, தினமும் தவறாமல் யோகா செய்து வருகிறார்.

நயன்தாரா பேசிய மோசமான கெட்ட வார்த்தை, மீண்டும் தொடங்கிய சர்ச்சை!!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுபவர். இவர் நடிப்பில் அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா என ஹாட்ரிக் ஹிட் அடித்தார்.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ஐரா படம் திரைக்கு வந்து நன்றாக ஓடி வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா மிக மோசமான வசனம் ஒன்றை பேசியுள்ளார்.

ஆம், ஒருவர் நயன்தாரா குறித்து ஆபாசமாக பேசுவார், அதற்கு நயன்தாரா அந்த கதாபாத்தின் பெயர் ஆதியை மிக மோசமான கெட்டவார்த்தை ஒன்றுடன் குறிப்பிட்டு பதிலடி கொடுப்பார்.
இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வரலட்சுமியின் படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி படத்தின் படப்பிடிப்பில் நடந்த தீவிபத்தில் தாயும் மகளும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போடா போடி, சர்க்கார் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது ரணம் எனும் கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

ரணம் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவுக்கு அருகில் உள்ள பாகலூரில் நடைபெற்று வருகிறது. அங்கு இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி தீவிபத்து ஏற்பட்டது.

அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருடந்த 5 வயது சிறுமியும், அந்த குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

கடைக்குட்டி சிங்கம் சீரியலில் இருந்து ஷிவானி வெளியேறியது இதனால் தான் : அதிர்ச்சிக் காரணம்!!

கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்த நடிகை ஷிவானி, சீரியல் துவங்கிய ஒரு மாதத்திற்குள்ளேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். காரணம் என்ன என விசாரிக்கையில் கிடைத்த தகவல் இதுதான்..

பகல் நிலவு சீரியலில் ஷிவானி-அசீம் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தான் அதே ஜோடியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் உடனே துவங்கினார்கள்.

சிறிய இடைவெளி எடுத்து ஓய்வெடுத்த பிறகு அடுத்த சீரியலில் நடிக்கலாம் என்று தான் ஷிவானி எண்ணினாராம். ஆனால் சேனல் தான் அவரை வற்புறுத்தி நடிக்க வைத்ததும்.

வேண்டாவெறுப்பாக நடிக்க ஆரம்பித்த அவர் தற்போது சின்ன பிரச்சனை ஏற்பட்டதால் உடனே விலகிவிட்டாராம் ஷிவானி.
இந்த சீரியலில் நடிக்கும் ஒருவரிடம் ஏற்பட்ட சண்டையால் தான் ஷிவானி வெளியேறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் எங்களுக்கு பிறந்த மகன் என கூறிய தம்பதி மீண்டும் கிளப்பிய சர்ச்சை!!

நடிகர் தனுஷ் எங்களது மகன் என கூறிய மேலூர் தம்பதி இது தொடர்பான வழக்கை கேரளா அல்லது கர்நாடகாவுக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அவர் மாதந்தோறும் பரமாரிப்புத் தொகையாக ரூ. 65 ஆயிரம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், மதுரை தம்பதிகள் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்நிலையில் தற்போது மீண்டும் கதிரேசன், மீனாட்சி தம்பதி இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அதில் மதுரையில் இருந்து வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில், தனுஷூக்கு உரிமை கோரும் மதுரை தம்பதிகள் வழக்கு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.