பிக்பாஸ் ஓவியாவாக மாற ஆசைப்பட்டு அசிங்கப்படுகிறாரா லாஸ்லியா?

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த புதிதில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த லாஸ்லியா. தற்போது ஓவர் ஆட்டிட்யூடை காட்டி வருகிறார்.

அவரிடம் பேசவே மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அஞ்சுகின்றனர். கமல் வரும்போது தனக்கு கைத்தட்டல்கள் அதிகமாக இருப்பதால் லாஸ்லியா ஓவர் திமிரில் ஆடி வருவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

செம கடுப்பு என்ன கேட்டாலும் பேசினாலும் எனக்கு அவஷியம் இல்லை அவஷியம் இல்லை என்றே கூறி வருகிறார் லாஸ்லியா. இதனால் அவர் மீது செம கடுப்பில் உள்ளனர் நெட்டிசன்கள்.

மேலும் லாஸ்லியா ஓவியாவை போல் நடிப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது. கூடவே கவினுடனும் லாஸ்லியா வழிந்து வருகிறார் லாஸ்லியா. அது சுத்தமாக மக்களுக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே அவரை மிக்ஸர் திண்பதாக கிண்டலடித்து வருகின்றனர். மேலும் லாஸ்லியாவை லூஸ்லியா என்றும் அழைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் இன்றைய புரமோவில் வெளியான லாஸ்லியாவின் படத்தை போட்டு லூசுலியா திங்கிங்:- ‘ஐயோ இந்த சிட்டுவேஷன்ல ஓவியா என்ன பண்ணுவானு தெரியலையே’ என பதிவிட்டுள்ளனர். லூசுலியா ஆர்மி என்ற பெயரில் இந்தபடம் பதிவிடப்பட்டுள்ளது.

என் மனைவிக்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்தது… அப்ப கூட நான்? கண்கலங்கிய சாண்டி!!

கண்கலங்கிய சாண்டி

பிக்பாஸ் வீட்டில் மொட்ட கடிதாசி டாஸ்க்கில், சாண்டிக்கு வந்த கடிதத்தில், நீங்கள் நடனம், காமெடி என்று இருக்கிறீர்கள், உங்களுக்கு அன்பு, காதல் எதுவும் இல்லையா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு சாண்டி இப்படி ஒரு கேள்வி வந்ததால், என் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை பகிர்கிறேன், எனக்கு எல்லாம் இப்போது என் மனைவி என் குழந்தை என்று நான் கூறுகிறேன், ஆனால் முன்பெல்லாம் நான் இப்படி கிடையாது.

என் மனைவியை கண்டால் நான் கண்டு கொள்ளமாட்டேன், வீட்டில் எங்கள் அப்பா-அம்மாவிற்கு சண்டை நடந்தால் கூட, கொஞ்சம் தள்ளி போய் சண்ட போடுங்க என்று தான் சொல்வேன், என்னை பொறுத்தவரை நான் பிரியாக இருக்க மட்டுமே நினைப்பேன்.

அதே போன்று தான் என் மனைவி சின்ன சின்னதாக யாரிடமும் சண்டை போட்டால், அவள் என்னிடம் வந்து சொல்வாள், நான் அவளிட நீ சண்டை போட்ட, நீ போ என்கிட்ட வராதே என்று கூறுவேன்.

அவள் அழுதால் என்றால் மூக்கில் இரத்தம் வழியும், இந்த பிரச்சனை இருப்பது எனக்கு தெரியும், ஒரு முறை அப்படி தான் அவளை ஏதோ கோபத்தில் திட்டிவிட்டேன், இதனால் அவளுக்கு மூக்கில் இரத்தம் அதிகம் வந்துள்ளது.

அதைக் கூட நான் கவனிக்காமல் இருந்தேன், அப்போது அவள் அம்மா வந்து என்னை அழைத்து கொண்டே இருந்தார். எதுவா இருந்தாலும் இப்போ சொல்லுங்க, இங்கே சொல்லுங்க என்று கூறினேன்.

அதன் பின் தன் உண்மை தெரிந்து அங்கே போகிறேன் அவள் வைத்திருந்த டவளில் அவ்ளோ இரத்தம். அதை கண்டவுடன் மனம் மாறினேன், அவளுக்காக வாழவேண்டும் நினைத்தேன்.

ஆனால் அவள் அப்போதும் என்னை நம்பவில்லை, பல முயற்சிகள் எடுத்தேன் எல்லாம் தோல்வியில் முடிந்தது. அப்போது அவள் என்னிடம் குடும்பத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும், குழந்தையை பார்க்க வேண்டும் என்றெல்லாம் சத்தியம் கேட்டாள், அதை செய்து கொடுத்தேன் அதன் பின் தான் சகஜமானோம் என்று கண்கலங்கினார்.

அப்படி இருந்த சாண்டி இப்படி மாறுவதற்கு முக்கிய காரணம் என் மனைவி தான் அவளுக்கு ஐ லவ் யூ, அதுமட்டுமின்றி, வீட்டிற்கு சென்றவுடன் நானே இனி எல்லா வேலையும் செய்வேன், பிக்பாஸில் அவ்ளோ கற்றுக் கொண்டேன் என்று கூறினார்.

என் உயிரே போனாலும் அதை செய்யமாட்டேன்… பாத்ரூமிற்குள் கதறி அழுத லாஸ்லியா!!

லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் நேற்று வெறும் கண்ணீராகவே இருந்தது என்று கூறலாம், விளையாட்டு வினையாகி போனது என்பது தான் உண்மை. கவீன் விளையாட்டுத்தனமாக அனைத்து பெண்களிடமும் பழக, அதன் பின் அது வேறு மாதிரி சென்று இப்போது, ஷாக்சி,கவீன், லாஸ்லியா என்று ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக வந்து நிற்கிறது.

அந்த வகையில் லாஸ்லியா எனக்கும், கவீனுக்கும் இருக்கும் உறவைப் பற்றி யாரிடமும் விளக்க வேண்டிய அவசியமில்ல, ஷாக்சி இப்படி துன்புறுவதற்கு நான் தான் காரணம் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டு பாத்ருமீற்குள் சென்று அழுதார்.

அப்போது அங்கு வந்த சேரன், ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்ட போது, லாஸ்லியா நீங்கள் என்னிடம் பேச வேண்டாம், நீங்கள் என் பக்கம் நிற்கவில்லை என்று கூறினார்.

உடனே சேரன் நான் அப்படியெல்லாம் கிடையாது, உன் பக்கம் இருக்கும் நியாத்தை நீ சொல், உன் மீது பழி வந்துவிடக்கூடாது என்பதற்காக நீ பேசு என்று தான் கூறினேன் தவறாக நினைத்துவிட்டாய்.

ஒன்றே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுக்கிறேன், என் உயிரே போனாலும் நான் உன் பக்கம் தான் நிற்பேன தவிர வேறு யாரு பக்கமும் நிற்கமாட்டேன் என்று கூறினார்.

நடிகை காஜல் அகர்வால் மீது மோகம் : கோடீஸ்வர இளைஞர் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம்

நடிகை காஜல் அகர்வால் மீதான மோகத்தால் 75 லட்சத்தை தமிழக இளைஞர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மகனான 27 வயது இளைஞர், சில மாதங்களுக்கு முன்னர் கணனியில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, சில பெண்களின் புகைப்படங்களுடன் விளம்பரம் தோன்றியுள்ளது.

விளம்பரத்தில், நடிகைகளின் ஆ பாச படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கண்டதும் நடிகைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அந்த விளம்பரத்தை கிளிக் செய்து, உள்ளே சென்றுள்ளார். மேலும், தனது தகவல்களையும் அதில் பதிவு செய்துள்ளார். அடுத்த நிமிடமே சில நடிகைகளின் படங்கள் தோன்றி, அவர்களில் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்பிய அந்த இளைஞர், அந்த படத்தின் மீது ‘கிளிக்’ செய்துள்ளார். இதனை உறுதி செய்ய 50 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வந்துள்ளது.

அதன்படி அந்த இளைஞன் மணிகண்டன் என்பவரது வங்கி கணக்கில் பணத்தினை செலுத்தி உள்ளார். சற்றுநேரத்தில் அவரின் செல்போன் எண்ணுக்கு உறுதிசெய்யப்பட்ட எஸ்.எம்.எஸ். வந்தது.

இதன் மூலம் நடிகை காஜல் அகர்வாலை சந்தித்து விடலாம் என்று இளைஞர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இது பற்றிய தகவலை அப்போது அவர் யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.


இதற்கிடையே இணையதளத்தில் பதிவு செய்த தகவலைக் கொண்டு அவரிடம் ரூ.50 ஆயிரத்தை கறந்தவர்கள் மேலும் பணத்தை பறிக்க அந்த இளைஞர் யார், அவரது பின்னணி என்ன? என்பது குறித்து ரகசியமாக விசாரித்துள்ளனர். அந்த இளைஞர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

சில நாட்களில் மேலும் ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் நடிகை காஜல் அகர்வாலை சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் உஷாரான அந்த இளைஞர், இது ஏமாற்று வேலை என்று உணர்ந்து பணம் அனுப்ப முடியாது என மறுத்துள்ளார்.

அதற்கு பின்னர்தான் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்த சிலநிமிடங்களில் அந்த இளைஞனின் செல்போன் எண்ணிற்கு அவரையும் சில பெண்கள் மற்றும் நடிகைகளை இணைத்து, மார்பிங் செய்யப்பட்ட ஆ பாச படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி உள்ளனர்.

உடனே அந்த இளைஞன் அந்த படங்களை அழித்து விடுமாறு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்த ஆ பாச புகைப்படங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவ விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு அந்த வாலிபர், அந்த மோசடி பேர்வழிகளின் வலையில் விழுந்துவிட்டார். வேறு வழியின்றி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 3 தவணைகளாக 75 லட்சத்தை அனுப்பி உள்ளார்.

இந்த பணத்தை எடுத்துக்கொண்ட அவர்கள், அவர் பொன்முட்டையிடும் வாத்து என்று நினைத்து தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், நடந்ததை வெளியே சொல்ல முடியாமல் அந்த இளைஞன் தொடர்ந்து மன அ ழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார்.

பின்னர் அவர் வாழப் பிடிக்காமலும் அவமானம் தாங்காமலும் கொல்கத்தா சென்று த ற்கொலை க்கு முயன்றார். இதனை அடுத்து தொழிலதிபர் அளித்த புகாரின்படி ராமநாதபுரம் தனிப்படை கொல்கத்தா சென்று தொழிலதிபரின் மகனை மீட்டுள்ளனர்.

பின்னர் மணிகண்டனை பிடித்து விசாரித்த போது சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமார் பட தயாரிப்பிற்காக சில நபர்கள் பணம் தருவார்கள் என்று சொல்லி எனது கணக்கில் பணத்தை பெற்று சென்றார் என கூறியுள்ளார்.

அதன் பேரில் சென்னையில் சரவணக்குமாரை கைது செய்து விசாரணை செய்ததில் நடிகை மோகம் காட்டி ராமநாதபுரம் தொழிவதிபர் மகனிடம் பெற்ற ரூ.75 லட்சத்தில் ரூ.68 லட்சத்தை உலக கோப்பை கிரிக்கெட் சூ தாட்டத்தில் இழந்தது தெரிய வந்தது.

எஞ்சிய தொகை சரவணக்குமாரின் வங்கிக் கணக்கில் இருந்துள்ளது. இதனை அடுத்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார், மேலும் இது தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

லாஸ்லியா நாமினேட் செய்பவர்களை சரியாக வெளியேற்றும் பிக்பாஸ் : ஆதாரத்துடன் வெளியான புகைப்படம்!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது 12 பேர் தான் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலிருந்தே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. வேற லெவலில் வனிதா மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், முதல் வாரத்தில் எவிக்‌ஷன் இல்லையென்ற நிலையில், அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் இரண்டாவது வாரத்திலிருந்து எவிக்‌ஷன் ஆரம்பித்ததால் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது.

அதில், லோஸ்லியா யாரை நாமினேட் செய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், நிகழ்ச்சி தொடங்கிய தினத்திலிருந்தே லோஸ்லியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனால் அவர் யார நாமினேட் செய்வார் என்பதை எதிர்பார்த்தனர்.

அதன்படி, அவர் நாமினேட் செய்தவர்கள் தான் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். ஆம், மூன்றாவது வாரத்தில், வனிதாவையும், அடுத்து மோகன் வைத்தியாவையும், சென்ற வாரத்தில் மீராவையும் நாமினேட் செய்திருந்தார்.

அவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை லோஸ்லியா ஆர்மி வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர். அதுபோல, இந்த வாரத்தில், சாக்‌ஷியையும், மதுமிதாவையும் நாமினேட் செய்துள்ளார். இந்நிலையில், இந்த வாரம் கண்டிப்பாக் சாக்‌ஷி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸை விட்டு வெளியே வந்த மீராவை நேரில் சந்தித்த சேரன் மனைவி? நடந்தது என்ன?

சேரன் மனைவி

பிக்பாஸ் வீட்டில் நாட்டாமை டாஸ்க்கின் போது, மீரா மிதுன் ஓடி விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று அங்கு வந்த சேரன் அவரின் இடுப்பை பிடித்து தூக்கியதாக கூறி மிகப் பெரிய கு ற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனால் போட்டியாளர்கள் பலரும் விளையாட்டை போய் இவர் ஏன் இந்தளவிற்கு சீ ரியஸாக எடுத்து கொள்கிறார் என்று தெரியவில்லையே என கேட்டனர். அதன் விளைவாகவே மீரா மிதுன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், கணவரைப் பற்றி தவறாக பேசிய மீராவை, சேரன் மனைவி நேரில் சென்று சந்தித்ததாகவும், அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வா க்குவாதத்தில் மீரா மிதுனை, சேரன் மனைவி அ டித்துவிட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் இது அந்தளவிற்கு உண்மையில்லை எனவும் அப்படி என்றால் ஏற்கனவே ஆட்டம் போடும் மீரா மிதுன், இதை எல்லாம் எப்படி சும்மாவிடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ம துகோப்பையை கையில் வைத்தப்படி பாரில் படுத்திருக்கும் மீரா மிதுன் : வைரலாகும் புகைப்படம்!!

மீரா மிதுன்

பிக்பாஸ் மீரா மிதுனின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் ரசிகர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்தார் என்று கூறினால் அது மிகையாகாது.

அவருக்கு எதிராக ரசிகர்கள் வாக்களித்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மீரா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிரபல மாடலாக திகழும் மீரா, கையில் ம துக்கோப்பையை வைத்திருந்தபடி டேபிள் மீது படுத்துள்ள ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் ம துபான பப் எனப்படும் ம துபான பாரில் எடுக்கப்பட்டுள்ளது.

போட்டோ ஷூட்டுக்காக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீரா அதை தனது சமூகவலைதள பக்கத்தில் முன்னர் வெளியிட அது தற்போது வைரலாகியுள்ளது.

24 மணி நேரம் என்னையே சுத்தி வந்த கவீன் எங்கே? நள்ளிரவில் அவள் கூட என கண்கலங்கிய ஷாக்சி!!

கண்கலங்கிய ஷாக்சி

பிக்பாஸ் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒன்று செய்து, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கிவிடுகிறார். அது போன்று தான் மொட்ட கடிதாசி என்ற டாஸ்க் ஒன்றை கொடுத்து, அதில் போட்டியாளர்கள், மற்ற போட்டியாளர்களிடம் என்ன கேட்க விரும்புகிறீர்களோ கேளுங்கள் என்று கூறியிருந்தார்.

அதன் படி மொட்டக் கடிதாசியில், லாஸ்லியா, ஷாக்சிக்கு, கவீனுடன் பிரச்சனை இருக்கு என்று கூறும் அவர் அதன் பின் அவரிடம் பிரச்சனை முடிந்துவிட்டது என்று கூறி, சகஜமாகிவிட்டு, அதன் பின் பிரச்சனையை பற்றி கூறுவது ஏன்? உங்களுக்கும் கவீனுக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை என்று எழுதியிருந்தார்.

இந்த கடிதம் வந்தவுடன், ஷாக்சி, நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன், எனக்கு ஒரு ஆண் நண்பனாக அறிமுகமானது கவீன் தான், அதன் பின் லாஸ்லியா, இவர்கள் இருவரிடமும் நான் அந்த அளவிற்கு பழகி இருக்கிறேன்.

என்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களை பலவற்றை கூறியிருக்கிறேன். அதன் பின் கவீன் என்னிடம் தொடர்ந்து பேசி வந்தான். என்னுடன் இருந்தவர்கள் அதாவது ஷெரீன் கூட, கவீன் ஏன் ஷாக்சி கூட 24 மணி நேரமும் இருக்க, கொஞ்சம் பிரியா விடு என்று கேட்டார்.

அப்படி எல்லாம் இருந்த கவீன், கமல் சார் எபிசோடுக்கு பின் ஒரே இரவில் முற்றிலும் மாறிவிட்டான். நான் அன்றைய தினம் மனம் நொந்து அழுது கொண்டிருக்கிறேன், அப்போது அவன் லாஸ்லியாவிடம் நள்ளிரவில் சென்று அதிகம் நேரம் பேசிக் கொண்டிருக்கிறான்.

அதுமட்டுமின்றி நான் அதிலிருந்து மீள்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, அவளும், அவனும் கையை பிடித்து செல்கின்றனர், கொஞ்சுகின்றனர். எனக்கு இதை எல்லாம் பார்க்கும் போது எப்படி இருக்கும்.

எனக்கு கொஞ்சம் கூட அவன் மதிப்பு தரவில்லை, அதன் பின் நான் சகஜமானேன் தான், ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை, என்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளவேயில்லை என்று கண்கலங்கிய படி கூறினார்.

பிக்பாஸ் வீட்டின் துரோகி, பச்சோந்தி யார் யார் தெரியுமா?

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மீரா மிதுனை பலரும் மோசமாக சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.

இதற்கிடையில் விஜய் டிவி மீரா மிதுனுடன் ஒரு நேரலை இருக்கிறது. நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்கலாம் என்று நேற்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

அதன் படி இன்று நடந்த அந்த நேரலையில் பிக்பாஸ் வீட்டில் நட்புக்கு இலக்கணம் யார் என்று கேட்கப்பட்டது, அதற்கு கவீன் என்று கூறிய அவர், ஊம குசும்பு யார் என்று கேட்ட போது, லாஸ்லியா என்று கூறினார்.

அதன் பின் துரோகி பட்டம் யாருக்கு என்றால் தர்ஷன், அழகாக இருப்பது முகின், பச்சோந்தி தர்ஷன் என கூறி முடித்தார்.

பிக்பாஸ்ல நீ இருந்திருக்க முடியாது , நாரடிச்சிருப்பேன் : மதுமிதா மீது பொங்கிய பிரபலம்!!

மதுமிதா மீது பொங்கிய பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 ல் இந்த வாரம் மதுமிதா, கவின், சாக்‌ஷி, ரேஷ்மா, அபிராமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாதளவில் அனைவரின் முன்பும் வெளிப்படையாக நாமினேசன் செய்யப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க கிராமத்து டாஸ்கில் சாண்டி மதுமிதா இடையே பிரச்சனை எழுந்தது. ஆனால் சாண்டி மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் கடந்த முறை மதுமிதாவுக்கு தமிழ் கலாச்சாரம் என்ற சொன்னது பிரச்சனை வந்ததால் அப்போது அவரின் கருத்து சுதந்திரத்தை வரவேற்றவர் முன்னாள் போட்டியாளரான காஜல்.

ஆனால் சாண்டியை காரி துப்பியதோடு, நீயெல்லாம் ஆம்பளையா என கேட்டதோடு கமல்ஹாசனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து தற்போது பேசிய காஜல், மதுமிதா செய்தது தவறு. சாண்டி மன்னிப்பும் கேட்டுவிட்டார். இதே போல கவின், தர்ஷன், சாக்‌ஷி, முகேன் ஆகியோரிடம் மதுமிதா இப்படி நடந்துகொண்டால் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்க முடியாது.

நான் நாரடிச்சிருப்பேன். சாண்டிக்காக மட்டுமில்லை மற்ற யாருக்கு இப்படி பிரச்சனை என்றாலும் நான் தட்டிகேட்பேன்.வனிதா இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்திருக்காது என கூறியுள்ளார். என மதுமிதாவை சரமாறியாக கேட்டுள்ளார்.