நடிகை வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்த விஷால் : பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

நடிகர் விஷால் பெண் ஒருவரின் வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்து சென்றார் என அவதூறு பரப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் வெளியான மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் நடித்தவர் காயத்ரி சாய். சென்னையில் குடியிருக்கும் இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் ’கொங்கு நாட்டு இளவரசி’ என்ற பெயரில் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் விஷ்வதர்ஷினி என்ற பெண் காயத்ரியுடன் நட்பானார். பின்னர் ஒரு நாள் காயத்ரி வீட்டுக்கு சென்ற விஷ்வதர்ஷினி அவரிடம் அவசரமாக ரூ 20,000 கடன் கேட்ட நிலையில் காயத்ரியும் கொடுத்தார்.

இதன்பின்னர் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் விஷ்வதர்ஷினி தனது பேஸ்புக்கில் காயத்ரி மற்றும் அவர் மகள் குறித்து அவதூறு பரப்பினார். மேலும் நடிகர் விஷால், காயத்ரி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து இரவில் சென்றதாகவும் பதிவிட்டு அதிரவைத்தார்.

இது தொடர்பாக காயத்ரி கடந்தாண்டு நவம்பர் மாதம் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் விஷ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் சில மாதங்கள் கழித்து நேற்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காயத்ரி கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எனக்கு நீதி கிடைத்துள்ளது. விரைவில் விஷ்வதர்ஷினிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். விஷ்வதர்ஷினியைக் கைது செய்த சென்னை போலீஸ் ஆணையருக்கு நன்றி. விஷால் எனக்கு சிறு வயது முதலே நன்றாகத் தெரியும். என் வீட்டுக்கு வருவார், அவர் ஏன் சுவர் ஏறி குதித்து வரவேண்டும் என கூறியுள்ளார்.

என் மகளை நடிகை வனிதா விஜயகுமார் கடத்தி சென்றுவிட்டார் : கதறும் கணவன்!!

மகளை பராமரிப்பது தொடர்பான வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில் அது தொடர்பில் பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தொடர்ந்து எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.

ஆனந்தராஜ் மகளை தன்னுடன் ஐதராபாத்திற்கு அழைத்து சென்று வளர்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு வனிதா விஜயகுமார் ஐதராபாத் சென்று தன்னுடைய மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்.

இதை அறிந்த ஆனந்தராஜ் தன்னுடைய மகளை வனிதா விஜயகுமார் கடத்தி சென்று விட்டதாக ஐதராபாத் பொலிசில் புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து வனிதா திருவள்ளூர் நீதிமன்றத்தில் தன்னுடைய மகளுக்கு தான்தான் பாதுகாப்பு அளிப்பதாக கூறி தன் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக நடிகை வனிதா திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

விசாரணைக்காக அவரது கணவர் வராததால் தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.பின்னர் வெளியே வந்த வனிதா நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய மகளை நானே என் முழு பராமரிப்பில் வைத்து கொள்ளவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டேன், நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி நடிகை : கொந்தளித்த மற்றொரு நடிகை!!

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது ரொம்ப குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து செல்வது வழக்கமானது.

அதை ரசிகர்கள் பலர் விமர்சித்துள்ள நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் தூபியா நடத்தி வரும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

அந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஜிம்முக்கு ஒர்க்அவுட் செல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜான்வி கபூர் அணிந்து வரும் ரொம்ப, ரொம்ப குட்டியான ஷார்ட்ஸை பார்த்து தான் கவலையாக உள்ளது.

அவர் நான் போகும் ஜிம்முக்கும் வருகிறார். அடிக்கடி சேர்ந்து ஒர்க்அவுட் செய்கிறோம். ஜான்வி பற்றி சில நேரம் கவலையாக இருக்கும் என்று கூறினார்.

அமலா பால் படத்திற்கு ஏ சர்டிபிகேட் : அப்படி இன்ன இருக்கிறது?

நடிகர் அமலா பாலுக்கு தற்போது மிககுறைந்த பட வாய்ப்புகளே வருகின்றன. ஆடை, அதோ அந்த பறவை போல என இரண்டு தமிழ்ப்படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது. ரத்னகுமார் இயக்கிய ஆடை படத்தின் சென்சார் நேற்று முடிந்தது. படத்தை பார்த்த சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் ஆடை இல்லாமல் உடலில் டேப் மட்டும் சுற்றி நடித்திருந்த காட்சி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். அது ஒன்றிற்காகவே அடல்ட் ஒன்லி சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

மேலும் அமலா பால் படம் முழுவதும் கவர்ச்சியாகவே தான் வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

எல்லாவற்றையும் மூடி தான் இருக்கிறேன், நீங்கள் சரியாக பாருங்கள் : ரசிகனின் டுவிட்டிற்கு நடிகை பதிலடி!!

ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற மலையாள படங்களில் நடித்தவர் நடிகை திரிஷ்யா ரகுநாத். சமீபத்தில் தண்ணீரில் இருப்பது போல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ஒருவர், இப்படி கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ஏன் உங்களது இமேஜை கெடுத்துக் கொள்கிறீர்கள், ஒரு சகோதரனின் அட்வைஸ் என கூறியிருந்தார்.

அதற்கு நடிகை, புகைப்படத்தில் எல்லாவற்றையும் முடிந்தவரை மூடிக்கொண்டு தான் இருக்கிறேன். குறிப்பாக மார்பகத்தையும் மூடிதான் உள்ளேன், அதை வெட்டி எறிய முடியாது. எனக்கு அட்வைஸ் செய்வதற்கு பதில் நீங்கள் பார்க்கும விதத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை சாய் பல்லவிக்கு அடித்த லக்!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் போல் தெலுங்கு சினிமாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளார். அவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றிகண்ட படங்கள்.

இப்போது அவர் அங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் படம் இயக்கி வருகிறார், தற்போது அப்படத்தை RRR என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இதில் என்.டி.ஆருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை எட்கர் ஜோன்ஸ் நடிப்பதாக இருந்து பின் அவர் திடீரென விலகினார்.
அந்த வேடத்தில் பாலிவுட் நடிகைகளான ஷ்ரத்தா கபூர் அல்லது பரிணீதி சோப்ராவை நடிக்க வைக்க படக்குழு பார்த்தனர்.

இந்த நேரத்தில் படக்குழு நடிகை சாய் பல்லவியை அந்த வேடத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக காட்டிய பிக்பாஸ் சுஜா : ஒன்று கூடிய பிரபலங்களின் மனைவிகள்!!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. தமிழில் சில படங்களில் நடித்தவருக்கு வாய்ப்புகள் பெருமளவில் அமையவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நீண்ட நாட்களாக தான் காதலித்து வந்த நடிகரும் தயாரிப்பாளருமான சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக நண்பரான கணேஷ் தன் மனைவி நிஷாவுடன் சுஜாவுக்கு ஹோட்டலில் விருந்து வைத்துள்ளார்.

அண்மையில் Get Together சந்திப்பில் டிவி சானல் பிரபலம் அஞ்சனா, இயக்குனர் அட்லீ மனைவி பிரியா, ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி ஆகியோர் இணைந்துள்ளனர். இதில் சுஜாவும் கலந்துகொண்டார்.

தன் தாய்மையை அழகாக வெளிப்படுத்தும் விதமாக அவரை அவரின் கணவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அரைகுறை ஆடையில் கரகாட்டம் ஆடிய தொலைக்காட்சி பிரபலம் ஐஸ்வர்யா : திட்டும் ரசிகர்கள்!!

முந்தைய காலங்களில் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தவர்கள் சிலர் இப்போது எங்கே என்று தெரியவில்லை.

சில பிரபலங்களை மட்டும் நாம் சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். நமக்கு நடன நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் ஐஸ்வர்யா. இவர் இப்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார், அங்கு தமிழ் கலாச்சார நடனங்களை அவர் அங்கு பிரபலப்படுத்தி வருகிறார் என்பது நன்றாக தெரிந்த விஷயம்.

ஆனால் சமீபத்தில் அவர் கரகத்தை தலையில் வைத்துக் கொண்டு அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடியது பலருக்கும் கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது, சிலர் அவரை திட்டியும் வருகிறார்கள்.

ரகுல் ப்ரீத்சிங்கை பார்த்தால் வாந்தி வருகிறது : NGK பற்றி பிரபல நடிகை சர்ச்சைப் பதிவு!!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் NGK. நேற்று ரிலீசான இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நாயகியாக நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைகளுக்கு பேர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி, NGK பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ரகுலின் நடிப்பை அவர் மோசமாக விமர்சித்துள்ளார். அதாவது படத்தில் ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு அந்த பதிவில் சாய் பல்லவியின் நடிப்பை அவர் பாராட்டி, ரௌடி பேபியின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த பதிவில் NGK என்பதற்கு பதிலாக YGK என பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் மற்றொரு பதிவில் ரகுலை ஆபாசமாக அவர் வர்ணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னது கீர்த்தி சுரேஷா இது : உடல் எடையை முழுவதும் குறைத்து ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம், ரசிகர்களே ஷாக்!!

கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் வந்த மகாநடி படத்திற்கு இந்த வருடம் தேசிய விருது கூட கிடைக்கும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்டார், தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகின்றார்.

இதற்காக தன் உடல் எடை முழுவதையும் குறைத்து செம்ம ஸ்லீம்மாக இவர் ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களே ‘கீர்த்தியா இது?’ என்று கேட்க வைத்துள்ளது, இதோ…