இளம் பெண்ண ஆடையில்லாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டு மிரட்டல் விட்ட இயக்குனர் கைது!!

அண்மைகாலமாக சினிமாவில் Me Tooல் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை புகார்களாக வெளியிட்டு அதிர்ச்சியை எற்படுத்தினர். இந்நிலையில் மும்பையை சேர்ந்த 45 வயது நடிகர் தீபக் ஜெயின் தற்போது சிக்கியுள்ளார். சினிமாவில் காஸ்டிங் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன் காதலியை தாக்கியதாக வந்த புகாரால் அவரை போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளியன்று தீபக் ஜெயின் என்பவர் ஜாக்கேஸ்வரி ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் “சில நாட்களுக்கு முன் இளம் பெண்(25) வேலை தேடி ஹரியானாவிலிருந்து மும்பை வந்துள்ளார். அங்கு அவருக்கு அவர் ஒரு புகழ்பெற்ற தொலைக்காட்சியின் நடிகை ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் அந்த பெண்ணை தன் நண்பர் ஜெயினுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின் அந்த பெண்ணும் ஜெயினும் தொடர்பில் இருந்துள்ளனர். பின்னர் அந்த பெண் வேறொருவருடன் காதலில் இருப்பதாக சந்தேகப்பட்ட ஜெயின் அவரை துஷ்பிரயோகம் செய்து தாக்குதல் நடத்தியுள்ளார். இருப்பினும் தன் வழிக்கு வந்துவிடுமாறு அவர் வற்புறுத்த அந்த பெண் தொடர்ந்து மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் அந்த பெண்ணின் உடையில்லா புகைப்படங்களை அவளின் உறவினர்களுக்கு அனுப்பி சமாதானத்திற்கு கூப்பிட்டுள்ளனர். இந்த விசயத்தை உறவினர்கள் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் கூற பின் அவள் போலிசில் புகார் அளிக்க தீபக் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நடிப்பதை நிறுத்த போகிறேன் : இரவு முழுவதும் கண்ணீர் விட்ட சாய் பல்லவி!!

நடிகை சாய் பல்லவி செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.

செல்வராகவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என கூறியுள்ள அவர், விரும்பும் ரிசல்ட் வரும்வரை மீண்டும் மீண்டும் எடுப்பார். ஒரு நாள் அப்படி காலை முதல் மாலை வரை அவர் எதிர்பார்த்த நடிப்பு என்னிடம் வரவில்லை, நாளை பாப்போம் என கூறிவிட்டார்.

நான் வீட்டிற்க்கு சென்று அம்மாவிடம் கதறி அழுதேன். எனக்கு நடிப்பு வரவில்லை, டாக்டர் வேலைக்கே சென்று விடுகிறேன் என கூறினேன்.

இரவு முழுவதும் அழுதுவிட்டு மறுநாள் காலை முதல் ஷாட்டிலேயே செல்வராகவன் ஓகே செய்தார். ‘அம்மா போன் செய்தார்களா?’ என் கேட்டேன். ‘இல்லை, நான் கேட்டது இப்போது கிடைத்தது’ என பதில் அளித்தாராம் செல்வராகவன்.

தன் பெயரில் சமூக வலைத்தளத்தில் மோசடி : அதிர்ச்சியில் நடிகை மியா விளக்கம்!!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை மியா ஜார்ஜ். சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் அவர்.

இந்நிலையில் அவரது பெயர் கொண்ட ஒரு சமூக வலைதள பக்கத்தில் மியா ஒரு படம் இயக்கப்போகிறார் என்றும், அதற்காக நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் மியாவுடன் சேட் செய்த ஸ்கீரீன்ஷாட்களும் வெளியானது.

இதை பார்த்து அதிர்ச்சியான நடிகை, “என்னுடைய பெயரில் போலி கணக்கு துவங்கி யாரோ தவறாக மோசடி செய்து வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். நான் யாருடனும் சேட் செய்வதில்லை” என விளக்கம் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 ல் இந்த முக்கிய பிரபலங்களா : நிகழ்ச்சியில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்!!

பிக்பாஸ் சீசன் 3 வரும் ஜுன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.

அண்மையில் இதில் கலந்துகொள்ளப்போகிறவர்கள் என சில பிரபலங்களின் பெயர்களும் வந்தது. இதில் ஆண் பெண் குரலில் பாடி அசத்தும் சாக்‌ஷியின் பெயரும் இருந்தது.

ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி மீது சில எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தாலும் எதையாவது செய்து பரபரப்பை கூட்டி TRPல் இடம் பிடித்து விடுகிறார்கள்.

இதற்கிடையில் LGBTQ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த ஐடியாவை கொண்டு தான் சாக்‌ஷி பெயரும் சொல்லப்பட்டதாம்.

தற்போது இந்த LGBTQ சமூகத்தில் இருந்து தர்மதுரை பட திருநங்கை ஜீவா சுப்ரமணியம், அருவி பட திருநங்கை எமிலி, சமூக ஊடகவியலாளர், சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருநங்கை கல்கியின் பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.

அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வேறொருவராக மாறிய நடிகை நிக்கி கல்ராணி : இதோ பாருங்க!!

மலையாளம், கன்னடம் பிறகு தமிழ் என தனது சினிமா பயணத்தில் கலக்கி வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழில் இளம் நடிகர்களுடன் நடித்து தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்துவிட்டார்.

படங்களை தாண்டி நிறைய நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது, விருது விழா செல்வது, போட்டோ ஷுட் என எப்போதும் பிஸியாக இருப்பார்.

அண்மையில் இவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் நிக்கி கல்ராணியா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

உறுதியானது சிம்புவின் திருமணம்… அதுவும் விஷால் திருமணத்திற்கு முன்னரேவாம்… மணப்பெண் யார் தெரியுமா?

சமீபத்தில் சிம்புவின் தம்பிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் திரையுலகிலும், உறவினர்கள் மத்தியிலும் சிம்புவின் திருமணம் எப்போது எனும் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது.

ஒரு மாதத்துக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சிம்பு திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவரது தந்தை டி.ராஜேந்தர், “அவர் தன்னுடன் நடித்தவரை அல்ல, பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்”, என கூறியிருந்தார்.

இதன் மூலம் சிம்புவுக்கு வீட்டில் பெண் பார்த்து வருவது உறுதியானது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சிம்புவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதாவது, தனது உறவுக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் சிம்பு திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது.

விஷால் திருமணத்திற்கு முன்னதாகவே சிம்புவின் திருமணம் நடைபெறும் என அவருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகும் பிக்பாஸ் யாஷிகாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ : லட்சக்கணக்கில் லைக்ஸ்!!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் யாஷிகா ஆனந்த். அவர் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகம் பிரபலமடைந்தார்.

தற்போது கைவசம் சில படங்கள் வைத்திருக்கும் யாஷிகா அதில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் பிட்டாக வைத்திருக்க ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் அவர்.

நேற்று அவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதற்கு ஒரே நாளில் ஒன்றரை லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

நான் பெண்களை தான் சைட் அடிப்பேன், ஏனென்றால் : சாய் பல்லவி ஓபன் டாக்!!

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் சாய் பல்லவி NGK படத்தின் ப்ரோமோஷனுக்காக சில சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றார்.

அதில் ஒரு பேட்டியில் ‘பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டனர், அதற்கு அவர் ‘அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.

அதே நேரத்தில் ஆண்களை விட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும் உடை விஷயத்தை பார்ப்பேன். வித்தியாச வித்தியாசமாக பெண்கள் உடை அணிந்திருப்பதை கவனிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்காததிற்கு என் தங்கை தான் காரணம் : உண்மையை உடைத்த சாய் பல்லவி!!

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர் கலர் கம்மி என்பதை உணர்ந்தாள்.

நானும் நிறைய வெஜிடேபுள் சாப்பிடு என்றேன், அதையும் அவள் செய்தால், அப்போது தான் தெரிந்தது கலர் என்பது ஒரு சிறு பிள்ளை மனதை எப்படி மாற்றுகிறது என, அதனாலேயே அதை ஊக்கப்படுத்துவது இல்லை’ என கூறியுள்ளார்.

30 ஆண்டுகளாக இளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை : வைரலான அவரது புகைப்படம்!!

30 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் வலம் வரும் தைவான் நாட்டு நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானவர் Stephanie Siao.

அவரது ரசிகர்கள் பலர், முப்பது ஆண்டுகள் வெற்றிகரமான நடிகையாக ஆசிய வெள்ளித்திரையில் வலம் வந்தாலும் அவர் இளமையாகிக் கொண்டே போவதாக விமர்சிக்கிறார்கள்.

பிரபல நடிகைகளான Lucy Liu, Naomi Watts, Ashley Judd மற்றும் Kylie Minogue ஆகியோர் பிறந்த அதே 1968ஆம் ஆண்டில் New Taipei நகரில் பிறந்தவர் Siao. 20 வயதில் மொடலாக களமிறங்கிய Siao, 1989இல் ரொமாண்டிக் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் வெள்ளித்திரையில் பிரபலமான Siao, தைவானின் மிக அழகான பெண் என அழைக்கப்படுகிறார். ஆகஸ்டில் 51 வயதை எட்ட இருக்கும் Siao, சமீபத்தில் சாதாரண உடையில் ஏர்போர்ட்டில் நடந்து செல்லும் படங்கள் வைரலாகியுள்ளன.

ஒரு ரசிகர், Siao பதின்ம வயது பெண்ணைப்போல் இருக்கிறார் என்று கூற, இன்னொருவர், அவர் இளமையாகிக் கொண்டே போகிறார் என்று கருத்து தெரிவிக்க, அந்த பக்கத்தை 310 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டார்கள்.

Siaoவின் அந்த படத்தைப் பார்த்து அதிர்ச்சியான ஒருவர், உண்மையாகவே அவருக்கு 51 வயதுதானா என்று கேட்க மற்றொருவர், 20 வயதுள்ள நிறைய ஆண்கள் அவரைப் பார்த்து மயங்கப் போகிறார்கள் என்கிறார்.